தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக வளம் வந்தவர் லிங்குசாமி. இவர் திருப்பதி பிரதர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த உத்தமவில்லன் என்ற திரைப்படத்தையும் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தான் தயாரித்திருந்தது. இப்படம் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்ததால் மிகப்பெரிய அளவு பணக்கஷ்டத்தில் மாட்டிக் கொண்டார் லிங்குசாமி.
அதிலிருந்து மீளவே முடியாமல் தவித்து வருகிறார். இதனை பல்வேறு பேட்டிகளிலும் லிங்குசாமி வெளிப்படையாகவே கூறியிருப்பார். இந்த நஷ்டத்தை ஈடு கட்டுவதற்காக கமல் தங்களுக்கு ஒரு படம் நடித்துக் கொடுப்பதாக எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் அது குறித்து பலமுறை கமலஹாசனிடம் பேசியும் இன்னும் தங்களுக்கு தேதி கொடுக்காமல் இருக்கிறார் என லிங்குசாமி கூறியிருக்கிறார்.
இந்நிலையில் ஒரு youtube சேனலில் உத்தமவில்லன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி என்று பிரபல பத்திரிக்கையாளர் தெரிவித்திருந்ததை பார்த்த திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திய திரைப்படம் உத்தம வில்லன். இது கமலஹாசனுக்கே தெரியும் என்று கூறியிருந்தது. மேலும் இது போன்ற பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் எனவும் அதில் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.