கொங்கு மண்டல அரசியலில் பெரும் அதிரடியாக, திமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் நடந்த தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட அதிருப்தி தலைவர்கள் பலர், செங்கோட்டையனை நேரில் சந்தித்து இது குறித்து ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில், சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்த கையோடு பிரம்மாண்டமான இணைப்பு விழாவை நடத்த அவர் உறுதியளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. திராவிடக் கட்சிகளின் கோட்டையாகக் கருதப்படும் கொங்கு பகுதியில், இரு பெரும் கட்சிகளிலிருந்தும் கணிசமான நிர்வாகிகள் தவெகவுக்கு மாறத் தயாராகி வருவது, வரவிருக்கும் அரசியல் களத்தில் ஒரு முக்கிய மாற்றத்திற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.
