‘தாத்தா தான் இப்படி பண்ணாரு’… 5 வயது சிறுமியை சீரழித்த வழக்கறிஞர்.. விளையாடச் சென்ற இடத்தில் நேர்ந்த விபரீதம்… போபாலில் அரங்கேறிய கொடூரம்…!!!

By Muthu Mani on வைகாசி 7, 2026

Spread the love

மத்தியப் பிரதேசம் போபாலில் உள்ள ஹபீப்கஞ்ச் பகுதியில், 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியில் வசிக்கும் 75 வயதுடைய வழக்கறிஞர் ஒருவரே இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி அந்த வழக்கறிஞரின் பேத்தியுடன் விளையாடச் சென்றபோது, அவர் சிறுமியைத் தனி அறைக்கு அழைத்துச் சென்று அத்துமீறியுள்ளார். தனது பேத்தி அவரை ‘நானா’ (தாத்தா) என்று அழைப்பதால், பாதிக்கப்பட்ட சிறுமியும் அவரை அவ்வாறே அழைத்து வந்துள்ளார்.

விளையாடிவிட்டு வீடு திரும்பிய சிறுமி, தனது உடலில் வலி இருப்பதாகத் தாயிடம் கூறியதையடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. சிறுமியைப் பரிசோதித்த தாய், காயங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்து மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். மருத்துவப் பரிசோதனையில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சிறுமி அளித்த தகவலின் அடிப்படையில் ஹபீப்கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

   

புகாரைப் பெற்ற காவல்துறையினர் உடனடியாகச் செயல்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட அந்த முதிய வழக்கறிஞரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மிகவும் பாதுகாப்பான மற்றும் வசதியான குடியிருப்புப் பகுதியில், ‘தாத்தா’ என்று அழைக்கப்பட்ட ஒருவரே இத்தகைய செயலில் ஈடுபட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு, குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளனர்.