கிழக்கு ஐரோப்பிய நாடான லாட்வியா கடுமையான பாலின ஏற்றத்தாழ்வை எதிர்கொண்டு வருகின்றது. மக்கள் தொகையின் தகவலின் படி அங்கு ஆண்களை விட 15.5 சதவீதம் பெண்கள்தான் அதிகமாக உள்ளனர். இது ஐரோப்பிய ஒன்றியத்தின் சராசரியை விட மூன்று மடங்கு அதிகமாகும். குறிப்பாக 65 வயதை தாண்டியவர்களில் பெண்களின் எண்ணிக்கை இரு மடங்காகவே உள்ளது. இந்த ஆண்களின் பற்றாக்குறை லாட்விய பெண்களின் அன்றாட வாழ்க்கையிலும் வேலை தளங்களிலும் எதிரொலிக்கின்றது. ஆண்களின் துணை இல்லாமல் அன்றாட வீட்டு தேவைகளையும் பழுதுபார்க்கும் பணிகளையும் சமாளிக்க அங்குள்ள பெண்கள் தற்போது பணியாட்களை வாடகைக்கு அமர்த்தும் சேவைகளை நாடி உள்ளனர்.
Komanda 24 என்ற இணையத்தளங்கள் ஆண்களை வாடகைக்கு அனுப்பும் சேவையை வழங்குகின்றது. இவர்கள் வீட்டு வேலைகளில் உதவுகிறார்கள். அதேசமயம் Remontdarbi.Iv என்ற மற்றொரு சேவை பெண்கள் ஒரு மணி நேரத்திற்கான கணவன் என்ற சேவையை ஆன்லைன் அல்லது தொலைபேசி மூலம் பதிவு செய்ய அனுமதிக்கின்றது. இந்த ஊழியர்கள் வாடகைக்கு எடுக்கும் பெண்கள் செய்ய சொல்லும் வேலைகளை செய்து முடிக்கிறார்கள். லாட்வியா நாட்டில் நூறு ஆண்களுக்கு 116 பெண்கள் உள்ளனர். ஆண்களில் பெரும்பாலானவர்கள் 65 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருப்பதால் இளம் பெண்களுக்கு ஏற்ற ஜோடிகள் கிடைக்காமல் பெரும் அவதிப்படுகிறார்கள். இதனால் கணவர்களை வாடகைக்கு வாங்கும் கலாச்சாரம் அங்கு அதிகரித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…
மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…
கணவன்-மனைவிக்கு இடையே நீண்ட நாட்களாக குடும்பப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. குறிப்பாக, கணவன் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகக்…
ராஜஸ்தான் மிர்சாபூர் மாவட்டத்தின் பத்ரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பசாரி கிராமத்தில், இளம் பெண் ஒருவர் அவரது காதலன் மற்றும்…
ராஜஸ்தானின் தோல்பூர் மாவட்டத்திலுள்ள கெடுபுரா கிராமத்தில், இன்று (மே 25, 2026) தொடங்க திட்டமிடப்பட்டிருந்த 'ஸ்ரீமத் பாகவத கதை' பாராயண…