பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்டிருந்த பிணை நிபந்தனைகளைச் சென்னை உயர்நீதிமன்றம் தளர்த்தி உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு திமுக எம்.பி கனிமொழி குறித்தும், தந்தை பெரியார் குறித்தும் சமூக வலைதளங்களில் அவதூறாகக் கருத்து பதிவிட்டதாகத் தொடரப்பட்ட வழக்குகளில், எச்.ராஜாவுக்கு சிறப்பு நீதிமன்றம் 6 மாத சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்திருந்தது.
இந்தத் தண்டனையை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், அவரது தண்டனையை நிறுத்தி வைத்ததோடு, ஒவ்வொரு மாதமும் முதல் வேலைநாளில் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தது. தற்போது உடல்நலக் குறைவு காரணமாக எச்.ராஜா சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, எச்.ராஜாவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு நிபந்தனையைத் தளர்த்தினார். அதன்படி, எச்.ராஜா நேரில் ஆஜராக வேண்டிய அவசியமில்லை என்றும், அவருக்குப் பதிலாக அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜராகலாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ உலகளவில் வெளியாகிக் திரையரங்குகளில் கொண்டாட்டப்பட்டு வரும் நிலையில், திரையரங்கில் படத்தைப் பார்த்த தவெக…
தமிழ்நாட்டில் சுமார் 4,000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகள் இயங்கி வரும் நிலையில், தினமும் பல நூறு கோடி…
தமிழகத்தில் லஞ்சம் மற்றும் ஊழலை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில், தமிழக வெற்றி கழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து…
ரயில் தண்டவாளத்தில் தற்செயலாக விழுந்த சிறு குழந்தையைக் காப்பாற்ற, தந்தை ஒருவர் தனது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் அடுத்த நொடியே…
தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைத்துள்ள சூழலில், கட்சியின் உட்கட்டமைப்பை பலப்படுத்த அதன் தலைவரும் முதல்வருமான விஜய் தீவிர நடவடிக்கைகளை…
துருக்கியின் அங்காரா நகரில் வசித்து வரும் டெரின் டெனிஸ் என்ற பெண், கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தனது கணவரால் கொடூரமான…