ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் தோன்றிய “லால் சலாம்” திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளிவந்தது. இத்திரைப்படத்தில் கதாநாயகர்களாக விஷ்ணு விஷாலும் விக்ராந்தும் நடித்திருந்தனர்.
இத்திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு என்பது மிகவும் குறைவாகவே இருந்தது. மேலும் சமீபத்தில் ஒரு பேட்டியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியபோது திரைப்படத்தின் ஹார்ட் டிஸ்க் தொலைந்துப்போனதாக மிகவும் வருத்ததோடு கூறினார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட பிரபல மூத்த பத்திரிக்கையாளரான பிஸ்மி, “லால் சலாம்” திரைப்படத்தில் விஷ்ணு விஷால் நடித்தது குறித்த ஒரு தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதாவது “லால் சலாம்” திரைப்படத்தில் முதலில் விஷ்ணு விஷால் கதாபாத்திரத்திற்கு நடிகர் அதர்வாவைத்தான் தேர்ந்தெடுத்திருந்தார்களாம். ஆனால் விஷ்ணு விஷால் உதயநிதிக்கு மிகவும் நெருக்கமானவராம். எப்படியாவது தான் இந்த பிராஜெக்ட்டிற்குள் வரவேண்டும் என்று நினைத்த விஷ்ணு விஷால், உதயநிதியின் மேனேஜராக இருக்கும் செண்பகமூர்த்தியின் உதவியோடு “லால் சலாம்” திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகாவிடம் பேச்சு வார்த்தையை தொடங்கினாராம்.
அதர்வாவை இந்த பிராஜெக்ட்டில் இருந்து விலக்கிவிட்டு விஷ்ணு விஷாலை உள்ளே கொண்டு வர வேண்டும் என்று செண்பகமூர்த்தி தரப்பில் இருந்து கூறப்பட்டதாம். லைகா நிறுவனத்தினரும் வேறு வழி இன்றி அதர்வாவை இந்த பிராஜெக்ட்டில் இருந்து தூக்கிவிட்டு விஷ்ணு விஷாலை தேர்ந்தெடுத்தார்களாம். இவ்வாறு ஒரு தகவலை பிஸ்மி அப்பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…