80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். அதில் குஷ்பூ கார்த்திக் ஜோடி பிரமாதமாக இருக்கும். நம்ம பூமி, கிழக்கு வாசல் உள்ளிட்ட பல்வேறு படங்களில் குஷ்பூவும் கார்த்திக்கும் இணைந்து நடித்துள்ளனர்.

குஷ்புவின் சினிமா வாழ்க்கையில் கார்த்திக்கு பெரும் பங்கு இருக்கிறது. சமீபத்தில் குஷ்பு அளித்த பேட்டியில் தனது திருமணத்தில் கார்த்திக் தேம்பித் தேம்பி அழுததாக கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான சுந்தர்.சியும் குஷ்புவும் ஐந்து வருடங்களாக ஒருவரை ஒருவர் காதலித்தனர். அவர்களது திருமணம் பெற்றோர் சம்பந்தத்துடன் நடந்தது.

முறைமாமன் படத்தில் நடித்ததில் இருந்து குஷ்பூக்கும் சுந்தர்சிக்கும் இடையே காதல் மலர்ந்தது. இன்று வரை சிறந்த நட்சத்திர ஜோடியாக இருவரும் பலம் வருகின்றனர். குஷ்பூ சுந்தர்.சியின் காதல் ரகசியங்கள் எல்லாம் கார்த்திக்கு தெரியுமாம். இவர்களின் காதல் கைகூடுமா கூடாதா என்ற பயம் அவருக்கு இருந்தது. முதலில் பெற்றோர் சம்மதம் தெரிவித்ததும் சுந்தரியும் குஷ்பூவும் கார்த்திக்கிடம் தான் திருமணம் செய்தியை கூறியிருக்கிறார்கள்.

அதனை கேட்டதும் ஆனந்தத்தில் கார்த்திக் தேம்பித் தேம்பி அழுதாராம். அந்த ஒரு சென்டிமென்ட் தான் குஷ்பூ சுந்தர் சி திருமணத்தில் நடந்தது. திருமணம் முடிந்த பிறகு சுந்தர்சியும் குஷ்புவும் கார்த்திக்கின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியுள்ளனர். அப்போது என் தம்பியும் தம்பி மனைவியும் காலில் விழுகிறார்கள் என நினைத்து அழுது கொண்டே கார்த்திக் ஆசீர்வாதம் செய்ததாக குஷ்பு கூறியுள்ளார்.

