தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக இரண்டு தோல்விப் படங்கள் கொடுத்தாலே அந்த இயக்குனரை ஓரம் கட்டிவிடுவார்கள். ஆனால் இயக்குனர் பிரபு சாலமன் தனது தொடக்கக் கால படங்கள் அனைத்திலும் தோல்வி கண்டார். ஆனாலும் அந்த வெற்றியில் இருந்து மீண்டும் அவர் கம்பேக் கொடுத்த படம்தான் மைனா.
அவர் இயக்கத்தி 2010 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான மைனா திரைப்படம் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றது. அந்த ஒரே படத்தால் அவர் கவனிக்கப்படும் முன்னணி இயக்குனர் ஆனார். அதன் பின்னர் அவர் இயக்கிய திரைப்படம்தான் கும்கி.
இந்த திரைப்படத்தில் பிரபுவின் மகனான விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் ஆகியோரை அறிமுகம் செய்தார். இந்த படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. மலைவாழ் கிராமம் ஒன்றுக்கு கும்கி யானை தேவைப்பட, கோமாளி யானையை வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் விக்ரம் பிரபு அந்த கிராமத்துக்குள் செல்கிறார்.

#image_title
அங்கு அவர் லட்சுமி மேனனைப் பார்த்து காதலில் விழ, அந்த ஊரை விட்டு செல்ல மனம் விரும்பவில்லை. அவரின் காதலை லட்சுமி மேனன் ஏற்றுக்கொண்டாரா? காட்டு யானையை விரட்ட அழைத்து வரப்பட்ட கோமாளி யானை என்ன ஆனது? அந்த ஊரின் கட்டுப்பாடு என்ன ஆனது என்பதை நகைச்சுவையாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் சொன்ன படம் கும்கி.
இந்த படம் பற்றி சமீபத்தில் ஒரு நிகழ்வில் பேசிய பாடல் ஆசிரியர் யுகபாரதி, “கும்கி படத்துக்கு மொத்தம் 8 விதமான க்ளைமேக்ஸை எடுத்து வைத்திருந்தார் இயக்குனர். அதில் ஒரு க்ளைமேக்ஸில் விக்ரம் பிரபு இறந்துவிடுவார். அதைதான் வைக்கலாம் என முடிவு செய்தார் இயக்குனர். ஆனால் படம் பார்த்த பிரபு ‘என் பையன் நடிக்குற முதல் படம் இது. அவனை கொன்னுடாதீங்க” என அழுதார். அதன் பிறகுதான் அவரை தவிர மற்ற எல்லோரும் சாவது போன்று எடுக்கப்பட்டிருந்த க்ளைமேக்ஸை வைத்தார்காள்.” எனக் கூறியுள்ளார்.