முத்து படத்திற்காக கே.எஸ் ரவிக்குமாருக்கு.. ரஜினி கொடுக்க சொன்ன சம்பளம்.. ஆடிப்போன தயாரிப்பாளர்..!!

By Nanthini on ஆவணி 19, 2024

Spread the love

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் ஏராளமான குடும்ப திரைப்படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார். இவர் இயக்கத்தில் ரஜினி முதலில் நடித்த திரைப்படம் தான் முத்து. கடந்த 1995 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன இந்த திரைப்படத்தை கே பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்திருந்த நிலையில் இந்த படத்தில் நடிகர் ரஜினிக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார். சரத் பாபு எஜமானாக நடிக்க இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்திற்கு ஏராளமான விருதுகளும் கிடைத்தன.

   

இந்தத் திரைப்படம் மூலம் ரஜினிக்கு ஜப்பானில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாலும் உருவானது. ஜப்பானில் அதிகம் வசூல் செய்த இந்திய திரைப்படம் என்ற சாதனையை 20 ஆண்டுகளுக்கு மேலாக முத்து திரைப்படம் தக்க வைத்துள்ளது. சமீபத்தில் தான் ஆர் ஆர் திரைப்படம் இந்த சாதனையை முறியடித்தது. இந்நிலையில் முத்து திரைப்படத்திற்காக தான் வாங்கிய சம்பளம் பற்றி இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் ஒரு பேட்டியில் வெளிப்படையாக பேசியுள்ளார்.

   

 

முத்து திரைப்படத்தில் கமிட்டாகும் முன்பு எவ்வளவு சம்பளம் வாங்குகிறீர்கள் என்று ரஜினி கேட்டுள்ளார். அதற்கு அவர் 12 லட்சம் வாங்குவதாக கூறியுள்ளார். உடனே முத்து படத்திற்கு அவரின் சம்பளம் 15 லட்சம் ரூபாய் என்று எழுதி அந்த படத்தை தயாரித்த கே பாலசந்தரிடம் ரஜினி கொடுத்துள்ளார். அதனைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். உனக்கு இவ்வளவு சம்பளமாடா என்று ஆச்சரியத்துடன் கேட்டார். ஏனென்றால் அவர் 5 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கியது கிடையாது.

அதற்கு கே எஸ் ரவிக்குமார் நீங்கள் குறைக்க வேண்டும் என்றால் குறைத்துக் கொள்ளலாம் என்று கூற கே பி பாலசுந்தர் ரஜினியே கையெழுத்திட்டான் அதை குறைக்க முடியாது என்று சொல்லி அந்த சம்பளத்தை அப்படியே கொடுத்துள்ளார். அது மட்டுமல்லாமல் தான் இயக்கிய நாட்டாமை திரைப்படத்திற்கு வெறும் ஐந்து லட்சம் தான் சம்பளம் கொடுத்தார்கள் என்றும் கேஎஸ் ரவிக்குமார் வெளிப்படையாக பேசியுள்ளார்.