கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாடு முழுவதும், குறிப்பாக மகாராஷ்டிராவில் தஹி ஹண்டி (உறியடி) திருவிழா பாரம்பரிய உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ‘கோவிந்தாக்கள்’ என அழைக்கப்படும் இளைஞர்கள் திரண்டு, அந்தரத்தில் தொங்கவிடப்பட்டுள்ள தயிர்ப் பானையை உடைப்பதற்காகப் பல அடுக்கு மனித பிரமிடுகளை உருவாக்கித் தங்களின் வீரத்தையும் திறமையையும் வெளிப்படுத்தினர். எனினும், இந்த ஆண்டின் கொண்டாட்டங்களின் போது நேரிட்ட எதிர்பாராத விபத்துகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. மும்பை மால்வானி பகுதியில் உறியடி பானையைக் கட்டியிருந்த செங்கல் தூண் திடீரென இடிந்து விழுந்ததில் ருத்ரா கதம் என்ற 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். அதேபோல் புனே பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியில் ஒலிபெருக்கி அமைப்பின் இரும்புச்சட்டம் சரிந்து விழுந்த விபத்தில் சல்மா என்ற பெண் உயிரிழந்தார்.
இந்த அசம்பாவிதங்கள் மட்டுமன்றி, மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களில் 168 பேரும், தானே நகரில் 44 பேரும் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தொடர் விபத்துகள் கொண்டாட்டங்களின் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு முறைகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன. இச்சம்பவங்களைத் தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மனித பிரமிடுகளை உருவாக்கி சாதனைகளைப் படைப்பதை விடவும், விழாக்களில் பங்கேற்கும் கோவிந்தாக்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பிற்குத் தான் அமைப்பாளர்களும் பங்கேற்பாளர்களும் முதலிடம் அளிக்க வேண்டும் எனத் தீவிரமாக அறிவுறுத்தியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டம் காசரோல் காவல் எல்லைக்குட்பட்ட மூர்கியா கிராமத்தில், ஒரே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த அண்ணன்,…
ஹரியானா மாநிலம் சோனிபட் பகுதியில், ஆபத்தான ரகத்தைச் சேர்ந்த பிட்புல் வளர்ப்பு நாய் ஒன்று, 6 மாதமே ஆன கைக்…
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகிலுள்ள ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் அதிகாலை 5 மணி முதலே அதிர வைக்கும் ஒரு சம்பவம்…
ஜார்க்கண்ட் மாநிலம் சக்ரதார்பூர் பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலகத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த அனிதா பிந்த்…
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள பிரபல மத்திய சந்தைப் பகுதியில் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து தொழிலதிபர் ஒருவர் கட்டிய…
தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வுகள் நேரலையாக ஒளிபரப்பப்பட்ட பிறகே பாமக சட்டமன்ற உறுப்பினர்களின் விவாதங்களும் ஆக்கப்பூர்வமான கருத்துகளும் பொதுமக்களிடம் நேரடியாகச் சென்று…