Actor KBY Bala

முதியவர் கடையை அடித்து நொறுக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர்… தேடிப் போய் உதவிய நடிகர் கேபிஒய் பாலா – என்ன செஞ்சிருக்காருன்னு பாருங்க!

By Elango on மாசி 21, 2026

Spread the love

புதுக்கோட்டை – சிவகங்கை மாவட்ட எல்லை பகுதியில் திருமயம் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள நெய்வாசல்பட்டி என்ற கிராமப் பகுதியில் காட்டுக்குள் ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் முதியவர் ஒருவர் கடை வைத்திருந்தார். 2 தினங்களுக்கு முன்பு அங்கு பைக்கில் வந்த திருமயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் முதியவரின் கடையை அடித்து உதைத்து சேதப்படுத்தினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டு போலீஸ் ஐஜி பாலகிருஷ்ணன் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். இந்த சூழ்நிலையில் திரைப்பட நடிகர் கேபிஒய் பாலா பாதிக்கப்பட்ட அந்த முதியவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவருக்கு சொந்தமாக ஒரு ஜூஸ் கடை வைத்தும் கொடுத்திருக்கிறார். மேலும் அவருக்கு பண உதவியும் செய்து இருக்கிறார். இந்த தகவல் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.