#image_title
சென்னையில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ரூ. 1000 வீதம் ரூ. 2 லட்சம் பணத்தை கொடுத்து உதவினார் கலக்கப் போவது யாரு பாலா. இவர் விஜய் டிவியில் பிரபலமாக இருக்கிறார். சில படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்துள்ள வளரும் கலைஞராக இருக்கிறார். எனினும் மற்றவர்களுக்கு உதவுவதில் மிகவும் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். முதலில் 200 குடும்பங்களுக்கு தல ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவிய பாலா, இப்போது தனது சீட்டுப் பணம், அதாவது தனக்கான சேமிப்பு பணமாக இருந்த ரூ. 3 லட்சம் ரூபாயை, 140 குடும்பங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கியுள்ளார். மேலும் நைட்டீ, லுங்கி, பெட்ஷீட் மற்றும் உபகரணங்கள் எனவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி உள்ளார்.
KBY Bala
இதுகுறித்து ஒரு நேர்காணலில் பாலா கூறுகையில், இது பப்ளிசிட்டிக்காக நான் பண்ணவில்லை. இப்படி உதவி பண்ணுவது வெளியே தெரியும் போது, மற்றவர்களுக்கு உதவி தேவைப்படுவதும் எனக்கு தெரிய வருகிறது. துரைப்பாக்கம் பக்கத்துல ஒரு வீட்டுல பாம்புகளா இருந்தது. யாருமே போக முடியலை. 2 பேர் தான் இருந்திருக்காங்க. அவங்களுக்கு உதவினோம். நான் இப்படி தருவது எல்லாமே என் சொந்த பணம்தான். 5 லட்சம் ரூபாய் தர வேண்டும் என ஆசைப்பட்டேன். முதலில் 2 லட்சம், இப்போது எனக்கான சேமிப்பாக வைத்திருந்த சீட்டுப்பணம் 3 லட்சம் ரூபாயை பாதிக்கப்பட்டவர்களுக்கு தந்துவிட்டேன்.
KBY Bala
என் அம்மாவிடம் நான் இப்படி செய்வது பற்றி கேட்ட போது, என் மகன் ஊதாரித்தனமாக செலவு செய்யவில்லை. கஷ்டப்படறவங்களுக்கு தானே கொடுத்து உதவறான் என்று சொல்லி விட்டனர். சென்னை தான் என்னை வாழ வைத்த ஊர். நான் சாப்பிடறது, இருக்கறது எல்லாமே சென்னை தான். அதனால என்னால முடிஞ்ச உதவிகளை நான் செய்யறேன். மத்தவங்களை பத்தி பேச எனக்கு தகுதி இல்லைன்னு நினைக்கிறேன்.கொஞ்ச நாள் வாழப் போறோம். இருக்கிற வரைக்கும் ஜாலியாக மத்தவங்களுக்கு உதவி செய்வோம். கடவுள் இருக்காரு, அவரு பார்த்துக்குவாரு, என்று கூறியிருக்கிறார் கேபிஒய் பாலா.
#image_title
சண்முக பாண்டியன் படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான…
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் இருந்து நடிகை ப்ரீத்தி வெளியேறி இருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…
கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…
நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…
நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…