விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பாலா. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்கும் மக்களிடம் வரவேற்பு பெற்றார். வளர்ந்து வரும் நடிகராக சில படங்களில் நடித்திருக்கிறார். சமீப காலமாக கஷ்டப்படும் மக்களுக்கு ஒடியோடி உதவும் இவரது தங்கமான குணத்தை பார்த்து, மக்கள் பாராட்டி வருகின்றனர். முதலில், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள மலைவாழ் கிராம மக்களுக்காக இலவசமான ஆம்புலன்ஸ் வாகனங்களை சொந்த பணத்தில் வாங்கிக் கொடுத்து உதவினார்.

அடுத்து சென்னையில் கடந்த வருடம் ஏற்பட்ட கனமழையால், வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு தனது சொந்த பணத்தில் இருந்து ரூ. 5 லட்சம் வரை எடுத்து அவர்களுக்கு உதவினார் KPY பாலா. இப்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது. இதில் எந்த விளம்பரமும் எனக்கு தேவையில்லை என்றும் அவர் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.

இப்படி யார் என்ன சொன்னாலும் கண்டுகொள்ளாமல் உதவி செய்து வரும் KPY பாலா தற்போது குப்பைகளை நுண் உரமாகுதல் வேலைகளை செய்து வரும் பெரியவர் ஒருவருக்கு சொந்தமாக ஆட்டோ வாங்கி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், “இந்த அண்ணன் மைக்ரோ கம்போஸ்டிங்ல வேலை செஞ்சு வாழ்க்கையை நடத்த ரொம்ப கஷ்டப்பட்டாரு, அதனால நான் அவனுக்கு ஒரு புது ஆட்டோ கொடுத்தேன். ரொம்ப லவ் யூ அண்ணா” என்று பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
