சென்னை கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகியான வி.எஸ். பாபுவுக்கு இன்று அதிகாலை திடீரென கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் அவரை உடனடியாக அமைந்தகரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்குள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் முதற்கட்டச் சிகிச்சைகளை வழங்கி வருவதோடு, அவரது உடல்நிலையைத் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
