“முடிஞ்சு போன விஷயத்தை ஏன் பேசுறீங்க”.. காதலிக்க நேரமில்லை ட்ரைலர் வெளியீட்டு விழாவில் உதயநிதி குறித்த கேள்விக்கு பதில் அளித்த கிருத்திகா..!

By Nanthini on ஜனவரி 8, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்த தற்போது இளம் அரசியல்வாதியாக கலக்கி வரும் உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா ஸ்டாலின். இவர் தமிழில் சிவா மற்றும் ப்ரியா ஆனந்த் நடிப்பில் வெளிவந்த வணக்கம் சென்னை என்ற திரைப்படத்தின் மூலமாக முதன்முதலாக இயக்குனராக அறிமுகமானார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனியை வைத்து காளி என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். பின்னர் பெரியளவு திரைப்படங்களை இயக்காமல் இருந்து வந்த இவர் சமீபத்தில் பேப்பர் ராக்கெட் என்ற வெப் சீரியஸ் ஒன்றை இயக்கியிருந்தார்.

அடுத்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியா? இயக்குநர் கிருத்திகா உதயநிதி ஸ்டாலின்  சொன்ன பதில்! | Is Kiruthiga Udhayanidhi Stalin next Assembly Election  Contest? - Tamil Oneindia

   

தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார் கிருத்திகா ஸ்டாலின். தமிழக முதல்வரின் மருமகளும் எம்எல்ஏ மற்றும் நடிகரின் மனைவியுமான கிருத்திகா திரை துறையில் இருந்தாலும் வீட்டில் உள்ள அனைவரையும் மிகவும் கவனமாக பார்த்து வருகிறார். சினிமாவில் பாடல்கள், ஆல்பம் போன்றவற்றை இயக்குவதில் பிஸியாக இருந்து வரும் கிருத்திகா தற்போது கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள திரைப்படம் தான் காதலிக்க நேரமில்லை. ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இதில் ஜெயம் ரவிக்கை ஜோடியாக நித்யா மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகின்ற ஜனவரி 14-ஆம் தேதி திரைப்படம் வெளியாக உள்ளது.

   

காதலிக்க நேரமில்லை' ட்ரெய்லர் எப்படி? - காதலும் 'இழுக்கும்' இசையும்! | Kadhalikka  Neramillai Trailer Review - hindutamil.in

 

இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் படத்தின் டிரைலர் நேற்றை வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய கிருத்திகா உதயநிதி, காதலிக்க நேரமில்லை படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த படம் வெளியாவதில் நாங்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு இருக்கிறோம். ரசிகர்களாகிய உங்களை திருப்திப்படுத்தும் வகையில் படம் இருக்கும். படத்திற்கு ஏ ஆர் ரகுமான் தான் ஐந்து பாடல்கள் இசை அமைத்துள்ளார்.

ஜிகர்தண்டா டபுள் X படத்தின் முதல் விமர்சனம் நான் தான் சொல்வேன்... படம்  பார்த்தேன்... இயக்குனரின் அற்புதமான படைப்பு... பிரபல நடிகர் டுவிட் ...

கட்டாயம் இந்த பாடல்களும் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று கிருத்திகா பேசிக் கொண்டிருந்த சமயத்தில் செய்தியாளர்கள் உதயநிதியின் அரசியல் வாழ்க்கை குறித்து கேள்வி எழுப்பி உங்க கணவரை வைத்து படம் பண்ண விரும்புகிறீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த கிருத்திகா, அது முடிஞ்சு போன விஷயம், அதை ஏன் இப்போ பேசுறீங்க என்று ஒரே வரியில் பதில் அளித்து அந்த கேள்வியில் இருந்து நடுவில் சென்றார். மேலும் ஆரம்பத்தில் இரண்டு படங்கள் எடுத்துவிட்டு அடுத்த படம் எடுக்க ஏன் இவ்வளவு இடைவேளை என்று கேட்கப்பட்ட நிலையில் நான் இடைவேளை எடுத்துக் கொள்ளவில்லை தொடர்ந்து எழுதிக் கொண்டே தான் இருந்தேன் அதற்கான நேரம் இப்போதுதான் வந்தது என்று பதில் அளித்தார்.