கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் காதலன் வீட்டில் யாரும் இல்லாத போது தனிமையில் சந்தித்துக்கொண்ட காதலர்களிடையே ஏற்பட்ட தகராறு காதலியை கொன்று காதலனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பகுதியில் சிவலோஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த மீனாட்சி என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் சிவலோஷ் குடும்பத்தினர் வெளியூருக்கு சென்றுள்ளனர். இந்த சூழலை பயன்படுத்தி காதலன் மற்றும் காதலை இருவரும் தனிமையில் இருக்க முடிவு செய்த நிலையில் அந்த வாலிபரின் நண்பர் அவரது வீட்டில் சென்று பார்த்தபோது சிவலோஸ் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
மற்றொரு அறையில் அவருடைய காதலியை மயங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் சிவலோஷ் தன்னுடைய காதலியை கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தனிமையில் சந்தித்த காதல் ஜோடி இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த அவர் தன்னுடைய காதலியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
