Connect with us

ஒரு நாளைக்கு 23 முறை அத பண்ணுவே.. என்ன கண்ட்ரோல் பண்ணதே அந்த பிரபல நடிகர் தான்.. மனம் திறந்து பேசிய நடிகை குஷ்பூ..!

CINEMA

ஒரு நாளைக்கு 23 முறை அத பண்ணுவே.. என்ன கண்ட்ரோல் பண்ணதே அந்த பிரபல நடிகர் தான்.. மனம் திறந்து பேசிய நடிகை குஷ்பூ..!

 

தமிழ் சினிமாவில் 80’ஸ் மற்றும் 90’ஸ் காலகட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. மும்பையில் பிறந்து வளர்ந்த குஷ்பூ 1980 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக இந்தி சினிமாவில் நடிக்க தொடங்கினார். பின்னர் ஹீரோயினியாக கோவிந்தா அமீர்கான் உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார். தெலுங்கில் வெங்கடேஷ்க்கு ஜோடியாக கலியுக பாண்டவரூலு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

   

இவர் தமிழில் ரஜினி நடித்த தர்மத்தின் தலைவன் படத்தில் பிரபு ஜோடியாக நடித்த அறிமுகமானார். 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள குஷ்பூ தமிழில் மட்டும் 150 திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். ரஜினி, கமல், கார்த்திக், சரத்குமார், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து இருக்கின்றார். ரசிகர்களின் கனவு கனியாக வளம் வந்த குஷ்புவுக்கு கோயில் கூட கட்டப்பட்டுள்ளது.

அந்த அளவுக்கு தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை குஷ்பு. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி ஹீரோக்களிடம் ஜோடி சேர்ந்து நடித்து இருக்கின்றார். முறைமாமன் படத்தில் நடித்த போது சுந்தர்சியுடன் காதல் ஏற்பட இருவரும் திருமணம் செய்து கொண்டனர் .பின்னர் இவர்களுக்கு அவந்திகா, அனந்திகா என்று இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

சினிமா மட்டும் இல்லாமல் அரசியலிலும் கால் பதித்திருக்கின்றார். குஷ்பு முதலில் திமுகவில் இருந்த இவர் பின்னர் காங்கிரஸ் கட்சிக்கு சென்றார். அதிலிருந்து தற்போது பாஜக கட்சியில் இணைந்து இருக்கின்றார். அதுமட்டுமில்லாமல் சினிமாவிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகின்றார் நடிகை குஷ்பூ.

சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். அதில் தான் நடிக்க வந்த காலத்தில் தனக்கு இருந்த சப்போர்ட் குறித்தும் நடிகர்கள் தன்னிடம் பழகிய விதம் குறித்தும் பேசி இருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது “நான் ஒரு காபி லவர். ஒரு நாளைக்கு 23 காபி குடிப்பேன். இதை பார்த்த வெங்கடேஷ் அவளுக்கு இரண்டு காபி தவிர மூன்றாவது காபி போகவே கூடாது என்று ஸ்ட்ரிக்காக சொல்லிவிட்டார். என்னை மாற்றியது வெங்கடேஷ் தான்.

நடிக்க வந்த காலத்தில் பல நடிகர்கள் நடிகைகள் தனக்கு உறுதுணையாக இருந்தார்கள். பிரபு, கார்த்திக், சத்யராஜ், ரஜினி, கமல், விஜயகாந்த் ஆகிய பல நபர்களிடமிருந்து பல விஷயங்களை நான் கற்றுக் கொண்டேன். நான் ஒன்பதாவது மட்டும்தான் படித்திருக்கிறேன். அதனால் எனக்கு ஆங்கிலம் சரியாக பேச வராது.

அந்த சமயத்தில் எனக்கு புத்தகங்களை கொடுத்து படிக்க சொன்னது நாகார்ஜுனா. மேலும் யாராவது பேசிக் கொண்டிருந்தால் நான் ஓரமாக போய் உட்கார்ந்து விடுவேன். அப்போது பிரபு சார் தான் என்னை அழைத்து நீ பேசி கற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் .நியூஸ் பேப்பர் டெய்லி படிக்க வேண்டும் என்று எனக்கு பல உதவிகளை செய்து இருக்கிறார். நான் நடிக்க வந்த அந்த காலகட்டத்தில் எனக்கு அனைவரும் மிக உறுதுணையாக இருந்தார்கள்” என்று அந்த பேட்டியில் பெருமையாக தெரிவித்திருக்கிறார்.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top