கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் களியடி கிராமத்தை சேர்ந்த சுகுமாரன் (38) என்பவருக்கும் ரேஷ்மா (32) என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிகளுக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில் நர்சிங் படித்திருந்த சுகுமாரன் இஸ்ரேல் தலைநகரில் வேலை செய்து வந்துள்ளார். அங்கு அவர் 80 வயது மூதாட்டி ஒருவருக்கு மருத்துவ பராமரிப்பாளர் வேலை செய்து வந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் அவர் அங்கு தங்கியிருந்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதுமட்டுமல்லாமல் அவர் மருத்துவப் பணியாளராக இருந்த மூதாட்டியும் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து சுகுமாரனின் உடல் கடந்த வாரம் புதன்கிழமை கேரளாவிற்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. கணவன் உயிரிழந்த சம்பவத்தால் ரேஷ்மா மிகுந்த மனவேதனை அடைந்த நிலையில் மனரீதியில் பாதிக்கப்பட்ட மனநல சிகிச்சையும் பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் கணவன் மறைவால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த ரேஷ்மா தற்கொலைக்கு முயன்றுள்ளார். உயிருக்கு போராடிய அவரை மீட்ட குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி ரேஷ்மா உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..
