Categories: சினிமா

குஷ்பு-வயும் என்னையும் தொடர்புபடுத்தி.. என் பொண்ணு என்கிட்ட வந்து அழுவுறா.. மேடையில் மனமுடைந்த் பேசிய தனுஷின் அப்பா..

Spread the love

எட்டுப்பட்டி ராசா, என் ராசாவின் மனசிலே, வீரத்தாலாட்டு, சோலையம்மா, என் ஆச ராசாவே, கரிசக்காட்டு பூவே, வீரம் வௌஞ்ச மண்ணு உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் நடிகர் கஸ்தூரிராஜா. இவரது மகன்கள்தான் இயக்குநர் செல்வராகவன், நடிகர் தனுஷ்.

சமீபத்தில் கஸ்தூரிராஜாவையும், குஷ்பூவையும் தொடர்புபடுத்தி சில தகவல்கள் மீடியா சிலவற்றில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பிரஸ்மீட் ஒன்றில் இயக்குநர் கஸ்தூரிராஜா பேசியதாவது, தமிழகத்தை பேனா தான் பல ஆண்டுகள் ஆட்சி செய்தது. அதன்மூலமே இந்த பேனா என்கிற எழுதுகோலின் மகத்துவம், பெருமை அதில் புரிந்திருக்கும். அதில் மையை ஊற்றி எழுதுவதை விட உண்மையை எழுதுவதுதான் மிக முக்கியம்.

நான் இங்கு ஒரு இயக்குநராக வரவில்லை. ஒரு எழுத்தாளனாகத்தான் வந்திருக்கிறேன். நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் இருக்கின்றன. மக்களின் பிரச்னைகளை சொல்ல வேண்டிய கடமை, ஊடகங்களுக்கு இருக்கின்றன. அந்த பிரச்னைகளை எழுதி நாட்டில் பல மாற்றங்களை கொண்டு வர முடியும். பல பிரச்னைகளை தீர்க்க முடியும். ஆனால் தனிமனித விஷயங்களை, அவர்களது அந்தரங்கம் சார்ந்து விஷயங்களை எழுதி யாருடைய மனதையும் காயப்படுத்தக் கூடாது. ஏனெனில் ஒவ்வொருவருக்கும் தனிமனித வாழ்க்கை, குடும்பம், அந்தரங்கம் உள்ளது. அது இதுபோன்ற பொய்யான வதந்திகளால் கடுமையாக பாதிக்கப்படும்.

பள்ளிக்கு சென்ற என் மகள், என்னிடம் வந்து குஷ்பூ சித்தி சவுக்கியமான்னு கேக்கறாங்க என்று அழுகிறாள். இதற்கு காரணம் மீடியா. குஷ்பூ எனக்கு சகோதரி மாதிரி. இதுவரை நான் இயக்கிய 9 படங்களில் குஷ்பூ நடித்திருக்கிறார். நான் அவங்களுக்கு படம் பண்ண வேண்டும் என்றால், போன் செய்வேன். எத்தனை நாள் கால்ஷீட் என்றுதான் கேட்பார்.

ஏம்மா என்ன கேரக்டர், என்ன கதை என்றெல்லாம் கேட்க மாட்டியா, என்று கேட்டால், அதற்கு ஏழெட்டு படம் பண்ணிட்டோம். நான் படத்துக்கு தேவை என்பதால்தானே கூப்பிடறீங்க, என்பார். அதுதான் எனக்கும் குஷ்பூவுக்கும் உள்ள உறவு. அந்த பேனாவில் மை இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் எழுதி விடக்கூடாது என்று பேசியிருக்கிறார் இயக்குநர் கஸ்தூரிராஜா.

admin

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

40 minutes ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

46 minutes ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

50 minutes ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

1 மணத்தியாலம் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

1 மணத்தியாலம் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

1 மணத்தியாலம் ago