BREAKING: கரூர் துயரம்…. IG அஸ்ரா கர்க் தலைமையில் SIT அமைப்பு….!

By Nanthini on ஐப்பசி 3, 2025

Spread the love

கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி இரவு தமிழக வெற்றி கழகம் நடத்திய பிரச்சார கூட்டம் நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக வெற்றிக்கழகம் நிர்வாகிகள் ஆனந்த், நிர்மல் குமார் முன்ஜாமின் மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே கரூர் துயர சம்பவம் குறித்து அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர் எஸ்பியுடன் கூடுதலாக ஒருவரை இணைந்து இந்த சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. வழக்கு ஆவணங்களை சிறப்பு புலனாய்வு குழுவிடம் உடனடியாக ஒப்படைக்கவும் கரூர் போலீசாருக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.