தேசிய அரசியலில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமீபகாலமாக மாநில அரசியலை நோக்கித் தனது கவனத்தைத் திருப்பியிருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சொந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு முன்பாகவே தனது காரசாரமான கண்டனத்தைப் பதிவு செய்து அதிரடி காட்டிய கனிமொழி, அதைத் தொடர்ந்து சபரிவர்மன் லாக்கப் மரணம், பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் போன்ற தவெக அரசுக்கு எதிரான முக்கியமான பிரச்சினைகளிலும் முன்னின்று குரல் கொடுத்து வருகிறார்.
மாநில அளவிலானப் பிரச்சினைகளில் அவர் காட்டும் இந்தத் தீவிரமான ஈடுபாடும் உடனடி எதிர்வினைகளும், அவர் டெல்லி அரசியலில் இருந்து விலகி தமிழக மாநில அரசியலுக்குள் அதிகாரப்பூர்வமாகத் தடம் பதிக்க ஆயத்தமாகிறாரா என்ற கேள்வியையும் எதிர்பார்ப்பையும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் வலுப்படுத்தியுள்ளது.
சமீபத்தில் வெளியான நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்தைக் காண்பதற்காக, முதல்வர் விஜய்யிடம் அமைச்சர் விக்னேஷ் 3 மணி நேரம் பணி…
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான நிதி ஆதாரங்களைக் கண்டறியும்…
அரசு வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி, அமைச்சர் என். ஆனந்துக்கு எதிராக ஏற்கெனவே வழக்கு தொடர்ந்த தமிழக வெற்றிக்…
கர்நாடக மாநிலம் சுள்ளியா பகுதியில், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான பாத்திமத் நிஷானா என்ற பெண் குடும்பத் தகராறு மற்றும்…
ஊழலற்ற நிர்வாகமே இலக்கு எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்து வரும் நிலையில், அவர் வசம் உள்ள…
திமுக எம்.எல்.ஏ-க்கள் கைது செய்யப்பட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக உள்ள உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரில் சென்று சந்திக்காதது கட்சியினரிடையே…