#image_title
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நந்தினி’ சீரியலின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் ராகுல் ரவி. மாடலிங்கில் இருந்து சினிமாவுக்கு வந்த இவர், 2013 ல் நடிகராக அறிமுகமானார். மலையாளத்தில் ஃபகத் பாசில், துல்கர் சல்மான் என பிரபல நடிகர்களின் திரைப்படங்களில் நடித்த இவர், பின்னர் சின்னத்திரையில் ‘ பொன்னம்பிளி’ என்ற மலையாள சீரியல் மூலம் கால் பதித்தார்.
இதைத்தொடர்ந்து இவர் தமிழில் ‘நந்தினி’ சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார். மேலும் சாக்லேட் சீரியலிலும், சன் தொலைக்காட்சியில் சமீபத்தில்சேரி நிறைவடைந்த ‘ கண்ணான கண்ணே’ சீரியலிலும் தனது நடிப்பால் ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார். நடிகர் ராகுல் ரவி தனது நீண்ட நாள் காதலியான லட்சுமி நாயர் என்பவரை 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கேரள மாநிலம் பெரும்பாவூரில் 2020-ல் நடைபெற்றது.
இத்திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இவர்களின் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது. இந்நிலையில் திருமணமான சில மாதங்களிலேயே இவர்கள் பிரிந்துவிட்டதாகவும் தற்பொழுது கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது நடிகர் ராகுல் ரவியின் மனைவி அவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த புகாரில் அவர் கூறியுள்ளதாவது, ‘ அவர் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாகவும்’ எப் ஐ ஆர் பதிவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீஸ் விசாரணைக்கு பயந்து நடிகர் ராகுல் ரவி தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த செய்தியானது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் மோதல் போக்கு இன்னும் முழுமையாகக் தணியாத நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி…
சினிமா உலகில் பல நட்சத்திர தம்பதிகள் இருந்தாலும், எப்போதும் ரசிகர்களின் 'ஃபேவரைட்' லிஸ்டில் இருப்பவர்கள் ஜெனிலியா மற்றும் ரித்தேஷ் தேஷ்முக்.…
சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் தற்போதே அதிரத் தொடங்கியுள்ளது. இத்தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) சார்பில்…
மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீதான போர் நிறுத்தத்தை…
சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 27 வயதான பிரியதர்ஷினி, குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக எழும்பூர் அரசு மகப்பேறு…
ஓமன் வளைகுடாவில் இந்தியா நோக்கி வந்த சரக்குக் கப்பல் மீது ஈரானின் புரட்சிகர காவல் படை நடத்திய தாக்குதல், சர்வதேச…