“என்னவெனா சொல்வீங்க நா கேட்கணுமா.., யாரு காதுல பூ சுத்த பாக்குறீங்க”.. பூர்ணிமாவை வச்சி செய்த ஆண்டவர் (ப்ரோமோ)..

By Begam on மார்கழி 16, 2023

Spread the love

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இன்னும் 4 வாரங்களில் முடிவடைய இருக்கும்  நிலையில் 12 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். அனன்யா மிட் வீக் எவிக்ஷனில் இந்த வாரம் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. அனன்யாவை தொடர்ந்து இந்த வார இறுதியில்  கூல் சுரேஷ் வெளியேற்றப்படுவார் என கூறப்படுகிறது.

#image_title

இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில், ‘கலையும், கலையுணர்வும் வன்மத்தையும் , கோபத்தையும் தணிக்கும் அதற்கான சாயல்கள் வீட்டில் தெரிந்தது போல இருந்தது. ஆனால் அந்த வேஷம் கலைந்த பிறகு இந்த ஆழ எப்படி கவுக்கலாம் , எந்த ஆழ எப்படி காலி பண்ணுறது இப்படி யோசனைல போய்ட்டாங்க.

   
   

 

அப்போ வார ஆரம்பத்தில் பூசிக்கொண்டு அந்த பூச்சு நிஜ பூச்சு இல்லையா? அப்போ சாயம் கலைந்து விட்டதா? விசாரிப்போம்’ என்று கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில், ‘ என்னவெனா சொல்வீங்க நா கேட்கணுமா. யாரு காதுல பூ சுத்த பாக்குறீங்க’  என்று பூர்ணிமாவை வைச்சு செய்துள்ளார்.

ஆனால் ப்ரோமோவில் பார்ப்பதெல்லாம் நிஜ எபிசோடில் வருவதில்லை என்றும், பொறுத்திருந்து பார்ப்போம் இன்றைக்கு என்ன நடைபெறுகிறது என்றும் ரசிகர்கள் தற்பொழுது கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த ப்ரோமோ…