சமீபத்தில் கேரளாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். இவர் இப்போது ராஜ்ய சபா எம்பியாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்ஹாசனிடம், இன்றைய தலைமுறையினர் புதிய கூட்டணியை எதிர்பார்ப்பதால் மூத்த நடிகர்கள் ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்துவிட்டதா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த நடிகர் கமல்ஹாசன், புதிய கூட்டணிகள் உருவாக வேண்டும் என்பது முக்கியம்தான். பழைய விஷயங்களுக்கு ஓய்வு கொடுப்பதை ரசிகர்களே கவனித்துக் கொள்வார்கள். ஆனால் பழைய பிரபலங்களை ஓய்வு பெறச் சொல்வது அவர்களின் வேலை.
என்னை யாரும் இதுவரை ஓய்வெடுக்க சொன்னது இல்லை. ஆனால் மோசமான படங்களில் நடிக்கும் போது ஓய்வு பெற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றி இருக்கிறது. ஆனால் அப்போது என் நண்பர்கள், இத்துடன் நிறுத்தி விடாதே. ஒரு நல்ல படம் செய்துவிட்டு பின்பு ஓய்வு எடுத்துக் கொள் என்று சொல்லி இருக்கிறார்கள். அதனால் நான் இன்னும் அப்படிப்பட்ட ஒரு நல்ல படத்தை தான் தேடிக் கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அதனால் ஒரு பெரிய வெற்றி படத்தை கொடுத்துவிட்டு சினிமாவில் இருந்து ஓய்வு பெறப் போவதை நடிகர் கமல்ஹாசன் முன்கூட்டியே சூசகமாக கூறிவிட்டார். இது தற்போது வைரலாகி வருகிறது.
