தமிழகம் மட்டும் இல்லது இன்று இந்தியா முழுவதும் பிரபலமான தொலைக்காட்சி நிறுவனம் என்றால் அது சன் தொலைக்காட்சி நிறுவனம்தான். இன்று இந்திய அளவில் அதிக பார்வையாளர்களை கொண்ட தொலைக்காட்சி வரிசையில் முதல் இடத்தில் உள்ளது சன் தொலைக்காட்சி.
சன் நிறுவனத்தின் இந்த மிகப்பெரிய வளர்ச்சிக்கு அதில் ஒளிபரப்பாகும் தொடர்கள், நிகழ்ச்சிகள், புது புது படங்கள் இவையெல்லாம் ஒரு காரணம்.
என்னதான் நிகழ்ச்சிகள் நன்றாக இருந்தாலும், நிறுவனத்தின் நிர்வாக அதிகாரிகளும் இந்த வளர்ச்சிக்கு மிகப்பெரிய காரணம் என்றே கூறலாம்.
திரு. கலாநிதிமாறனால் தொடங்கப்பட்ட சன் நிறுவனம் இன்று உலகம் முழுவதும் பறந்து விரிந்துள்ளது. சன் நெட்வொர்கில் பல சேனல்கள் வரும் நிலையில் இந்தியா மட்டுமின்றி பிரித்தானியா, இலங்கை, கனடா உள்ளிட்ட 33 நாடுகளில் பார்க்க முடியும். 1991-ம் ஆ ண்டு மார்ச் 13 ஆம் தேதி சன் நெட்வொர்க் தொடங்கப்பட்டது.
கலாநிதி மாறன் 1965 ம் ஆ ண்டில், தமிழ்நாட்டில் பிறந்தார். அவர் நாட்டின் மிக முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் குடும்பத்தின் மிக முக்கியமான வாரிசு. இவருடைய தந்தை முன்னாள் மத்திய வர்த்தக அமைச்சர், திரு முரசொலி மாறன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இவருடைய தலைமையின் கீழ் சன் நெட்வொர்க் நிறுவனம் மிகப் பெரிய முன்னேற்றத்தை அடைந்து வளமான காலத்தை அனுபவித்து வருகின்றது.
1991ல், கலாநிதி மாறன் கர்நாடகத்தைச் சேர்ந்த காவேரி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். திருமதி காவேரி மாறன் அவர்கள் சன் டிவி நெட்வொர்க் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பதவி பெற்றுள்ளார்.
இவர்களுக்குக் காவ்யா என்கிற ஒரு பெண் குழந்தை 1992 ல் பிறந்தது. காவ்யா சன் ரைசர்ஸ் ஐபிஎல் அணியின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் காவ்யா சன் நெட்வொர்க் மற்றும் எஃப்எம் சேனலின் பொறுப்பாளராக உள்ளார்.
தற்பொழுது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது. இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘கலாநிதி மாறன் மகளா இது? பாக்க ஹீரோயின் போல இருக்காங்களே என கூறி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…