BREAKING: மாதம் ரூ.1000…. டிசம்பர் 12 முதல் விடுபட்ட மகளிருக்கு உரிமைத்தொகை… சற்றுமுன் வெளியான சூப்பர் அறிவிப்பு…!

By Nanthini on மார்கழி 4, 2025

Spread the love

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஏராளமான பெண்கள் பயனடைந்து வரும் நிலையில் சில குடும்ப தலைவிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. இதனால் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கும் விதமாக கடந்த மூன்று மாதங்களாக உங்களுடன் ஸ்டாலின் முகாம் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வந்தது. இந்த முகாம் மூலமாக மீண்டும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன் பெறுவதற்கு பலரும் புதிதாக விண்ணப்பித்தனர். இதுவரை உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக சுமார் 28 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் மகளிர் உரிமை தொகைக்காக விண்ணப்பித்துள்ளனர்.

இவர்கள் அனைவருடைய விண்ணப்பங்களும் சரிபார்க்கப்பட்டு வரும் நிலையில் தகுதியுள்ளவர்களுக்கு டிசம்பர் 15 முதல் மகளிர் உரிமைத்தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்குவது குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி டிசம்பர் 12 முதல் விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் மகளிர் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு அரசு தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் தடைகளையும் மீறி தமிழ்நாடு வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.