காலையிலேயே குட் நியூஸ்… மகளிர் உரிமைத்தொகைக்கு தேதி குறிச்சாச்சு… தமிழகம் முழுவதும் நவம்பர் 30ஆம் தேதிக்குள்.. வந்தாச்சு அப்டேட்…!

By Nanthini on கார்த்திகை 5, 2025

Spread the love

தமிழகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கடுமையான கட்டுப்பாடுகளால் சுமார் 1.15 கோடி பெண்கள் மட்டுமே பயனடைந்து வந்தனர். மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத குடும்பங்களின் அதிருப்தியை குறைக்கும் நோக்கத்தில், அரசு தற்போது பயனாளிகள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு முடிவு செய்துள்ளது. உங்களுடன் ஸ்டாலின் முக மூலமாக புதிதாக சுமார் 28 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் அவர்கள் அனைவருக்கும் விரைவில் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது.

இந்த விண்ணப்பதாரர்களில் வருமான வரி செலுத்தும் குடும்பங்களை சேர்ந்தவர்களை தவிர்த்து மற்ற தகுதியுள்ள பெண்களுக்கு உரிமை தொகை வழங்குவதற்கு நிதித்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சட்ட மன்றத்தில் அறிவித்தபடி இந்த புதிய பயனாளிகளுக்கு டிசம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது.

   

இந்நிலையில் ஜூலை 15 முதல் தற்போது வரை முப்பது லட்சத்திற்கும் அதிகமானோர் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்துள்ளனர். புதிய பயனாளர்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதி ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட உள்ள நிலையில் திட்டத்திற்கு தகுதியானவர்கள் குறித்து அறிவிப்பு இதுவரை வெளியாகாமல் உள்ளது. தற்போது தகுதியானவர்கள் விவரம் வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதிக்குள் வெளியாகும் என்ற உதயநிதி மீண்டும் உறுதி அளித்துள்ளார். இந்தச் செய்தி குடும்ப தலைவிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.