Categories: சினிமா

நான் இப்போ மட்டும் அப்படி இல்ல.. உதவி இயக்குனராக இருந்தபோதே அப்படிதான்.. KS.ரவிக்குமார் ஓபண்ஸ்..

Spread the love

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் தொடர்ந்து ஹிட்டு திரைப்படங்களை கொடுத்து பிரபலமாக இருந்தவர் கே எஸ் ரவிக்குமார். ரஜினி, கமல், சரத்குமார், பிரபு, விஜய், அஜித் மற்றும் சூர்யா என பல முன்னணி நடிகர்களை வைத்து கமர்ஷியல் படங்களைக் கொடுத்துள்ளார். கடைசியாக அவர் இயக்கிய லிங்கா உள்ளிட்ட படங்கள் தோல்வி அடைந்ததால் இப்போது நடிகராக மட்டும் பணியாற்றி வருகிறார்.

இயக்குனர் விக்ரமனிடம் அஸோசியேட் இயக்குனராக இருந்தவர் கே எஸ் ரவிக்குமார். அதற்கு முன்பே அவர் 30க்கும் மேற்பட்ட படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். விக்ரமன் இயக்கிய புதுவசந்தம் திரைப்படம் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அதில் பணியாற்றிய கே எஸ்  ரவிக்குமாருக்கு ‘புரியாத புதிர்’ படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தார் தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரி.

#image_title

அதில் தொடங்கிய கே எஸ் ரவிக்குமார் தொடர்ந்து கமர்ஷியல் ரீதியான படங்களாகக் கொடுத்து முன்னணி இயக்குனர் ஆனார். கமர்சியல் படங்களின் ராஜாவாக திகழ்ந்த இவர் இயக்கத்தில் இன்றுள்ள பல முன்னணி நடிகர்களும் நடித்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் தன்னுடைய ஆளுமை எப்படி உருவானது என்பது குறித்து பேசியுள்ளார்.

அதில் “நான் இயக்குனர் ஆனபின்னர் இப்படி மற்றவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்தும் ஆளுமையாக உருவாகவில்லை. நான் உதவி இயக்குனராக இருந்தபோதே எல்லோரையும் கண்ட்ரோல் பண்ணக் கூடியவனாக இருந்தேன். என்னுடைய இயக்குனர்கள் என்னுடைய மைக்ரோபோனைக் கொடுத்துவிட்டு கூட்டத்தை என்னைக் கண்ட்ரோல் செய்ய சொல்வார்கள். அதனால் எனக்கு அப்போதே அந்த திறமை இருந்ததாக நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

விளையாட்டாக பைக் ஓட்டிய வாலிபர்…. “நடுரோட்டில் தூக்கி வீசப்பட்டு….” வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் வாலிபர்கள் விபரீத விளையாட்டுகளில் ஈடுபட்டு ஆபத்தில் சிக்கி கொள்கின்றனர். அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் நடந்த ஒரு…

44 minutes ago

எங்களுக்கு அதிக சீட் கொடுக்க திமுகவுக்கு பயம்… ஆனால் நாங்க விடமாட்டோம்… திருமாவளவன் திட்டவட்டம்…!!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து…

60 minutes ago

குஷாயோ குஷி..! தமிழகத்தில் நாளை இங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…!!

தேவர் குருபூஜையை ஒட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார் கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவக்கோட்டை ஆகிய…

1 மணி நேரம் ago

ரத்தக் கறை படிந்த அரிவாள்… கட்டிலுக்கு அடியில் கிடந்த அனிதா… கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவர்…விசாரணையில் வெளியான திடுக் தகவல்கள்..!!

உத்திரபிரதேசம் ஹபீஸ்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் உள்ள கமுவா கிராமத்தைச் சேர்ந்த அனில், கடந்த நவம்பரில் அனிதாவை காதல் திருமணம்…

1 மணி நேரம் ago

“அண்ணியின் கள்ளக்காதல்…” அண்ணன் காணாமல் போனதால் பழி தீர்த்த தம்பி…. கடைக்காரருக்கு கத்திக்குத்து…. பகீர் சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அப்துல் அதே பகுதியில் ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த…

1 மணி நேரம் ago

“நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன்” அடம்பிடித்த சிறுவன்… கட்டிலோடு பள்ளிக்கு அழைத்து சென்ற குடும்பத்தினர்… வயிறு வலிக்க சிரிக்க வைத்த வீடியோ…!!

பள்ளிக்குச் செல்வது பல குழந்தைகளை அடிக்கடி பயமுறுத்துகிறது. அவர்களுக்குப் பள்ளிக்குச் செல்வது ஒரு கனவுதான். படிப்பு என்றாலே அவர்களுக்கு பாட்டியின்…

2 மணி நேரங்கள் ago