எடப்பாடி பழனிசாமிக்கு பேசுவதற்கு உருப்படியாக ஒன்றும் இல்லாததால், அவர் வாய்க்கு வந்தபடி எதையாவது பேசி வருவதாக அமைச்சர் கே.என்.நேரு விமர்சித்துள்ளார். குறிப்பாக, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் பலம் குறைந்து வருவதாகவும், மக்களிடையே திமுக அரசுக்கு இருக்கும் நற்பெயரைக் கண்டு அச்சமடைந்து அவர் இதுபோன்ற அவதூறுகளைப் பரப்புவதாகவும் நேரு குற்றம் சாட்டியுள்ளார். எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதற்கே தகுதியற்றவர் எனத் தெரிவித்துள்ள அவர், மக்கள் விரைவில் இபிஎஸ்-ஐ மறந்துவிடுவார்கள் என்றும் சாடியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அதிமுக மற்றும் பாஜகவுடன் மறைமுகத் தொடர்பில் இருப்பதாக அமைச்சர் கே.என்.நேரு சுட்டிக்காட்டியுள்ளார். விஜய் தனது உரைகளில் திமுக-வை மட்டுமே கடுமையாக விமர்சிப்பதும், பாஜக-வைப் பற்றி மௌனம் காப்பதும் அவர் யாருக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்பதைக் காட்டுகிறது என்று அவர் கூறியுள்ளார். மேலும், வேலைக்காகப் பணம் பெற்றதாகத் தன் மீது சுமத்தப்படும் புகார்களைப் பயன்படுத்திக் கொண்டு விஜய் அரசியல் செய்வதாகவும், இது அவர் எதிர்க்கட்சிகளுடன் கொண்டுள்ள ரகசியக் கூட்டணியின் ஒரு பகுதி என்றும் நேரு விமர்சித்துள்ளார்
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சின்ச்வாட் பகுதியில், பெண் ஒருவர் தான் வாங்கிய புதிய பெட்சீட்டில் 'மேட் இன் பாகிஸ்தான்'…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் ஆளுங்கட்சியான திமுகவிற்குப் பலத்த பின்னடைவு ஏற்படும் வகையில், அக்கட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள்…
நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த விவாகரத்து வழக்கு…