எடப்பாடி பழனிசாமிக்கு பேசுவதற்கு உருப்படியாக ஒன்றும் இல்லாததால், அவர் வாய்க்கு வந்தபடி எதையாவது பேசி வருவதாக அமைச்சர் கே.என்.நேரு விமர்சித்துள்ளார். குறிப்பாக, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் பலம் குறைந்து வருவதாகவும், மக்களிடையே திமுக அரசுக்கு இருக்கும் நற்பெயரைக் கண்டு அச்சமடைந்து அவர் இதுபோன்ற அவதூறுகளைப் பரப்புவதாகவும் நேரு குற்றம் சாட்டியுள்ளார். எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதற்கே தகுதியற்றவர் எனத் தெரிவித்துள்ள அவர், மக்கள் விரைவில் இபிஎஸ்-ஐ மறந்துவிடுவார்கள் என்றும் சாடியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அதிமுக மற்றும் பாஜகவுடன் மறைமுகத் தொடர்பில் இருப்பதாக அமைச்சர் கே.என்.நேரு சுட்டிக்காட்டியுள்ளார். விஜய் தனது உரைகளில் திமுக-வை மட்டுமே கடுமையாக விமர்சிப்பதும், பாஜக-வைப் பற்றி மௌனம் காப்பதும் அவர் யாருக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்பதைக் காட்டுகிறது என்று அவர் கூறியுள்ளார். மேலும், வேலைக்காகப் பணம் பெற்றதாகத் தன் மீது சுமத்தப்படும் புகார்களைப் பயன்படுத்திக் கொண்டு விஜய் அரசியல் செய்வதாகவும், இது அவர் எதிர்க்கட்சிகளுடன் கொண்டுள்ள ரகசியக் கூட்டணியின் ஒரு பகுதி என்றும் நேரு விமர்சித்துள்ளார்
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும்…
பெண்கள் தங்கள் தந்தையிடம் எப்போதும் செல்லக் குழந்தையாகவே இருப்பார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ஜோத்ஸ்னா என்ற பெண், நள்ளிரவு…
லக்னோ விகாஸ் நகர் பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் கடந்த புதன்கிழமை மாலை திடீரென பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.…
அலிகார் சந்தைப் பகுதியில் சுற்றித் திரிந்த காளை ஒன்று, தண்ணீர் குடிப்பதற்காக அங்கிருந்த ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்குள் (Water…