Categories: சினிமா

எம் ஜி ஆர், SS ராஜேந்திரனுக்கு முன்பே சட்டமன்றத்துக்குள் சென்ற பிரபல நடிகை.. பலரும் அறியாத தகவல்..

Spread the love

தமிழ் சினிமாவையும் தமிழக அரசியலையும் தனித்தனியாக எப்போதும் பிரிக்க முடியாது. அந்த அளவுக்கு இன்றுவரை இரண்டும் ஒன்றோடு ஒன்றாக கலந்துள்ளது. தமிழ் சினிமாவில் இருந்து தமிழகத்துக்கு இதுவரை ஐந்து அண்ணாதுரை, கருணாநிதி, எம் ஜி ஆர், ஜெயலலிதா மற்றும் வி என் ஜானகி என இதுவரை ஐந்து முதல்வர்கள் கிடைத்துள்ளனர்.

இதுதவிர அரசியலுக்கு வந்த விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக சில ஆண்டுகள் இருந்தார். இவர்கள் தவிர சமீப காலத்தில் ராமராஜன், டி ராஜேந்தர், பாக்யராஜ், சரத்குமார், சீமான் என தமிழ் சினிமாவில் இருந்து பலர் அரசியலுக்கு வந்துள்ளனர். சமீபத்தில் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற தன்னுடைய கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.

இப்படி பலர் தமிழக அரசியலில் பல திரைக்கலைஞர்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ள நிலையில், இதற்கெல்லாம் ஆரம்பப் புள்ளியாக இருந்தது யார் என்று தெரியுமா? அது இதுவரை பலரும் அறியாத தகவல். தமிழ் சினிமாவில் தன்னுடைய கந்தர்வக் குரலால் மயக்கிய மறைந்த நடிகை கே பி சுந்தராம்பாள்தான் அது.

சுதந்திரத்துக்கு முன்பிருந்தே காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக செயல்பட்ட அவர் மேடை நாடகங்களிலும் திரைப்படங்களிலும் விடுதலை போராட்டம், கதர் சட்டை இயக்கம், தீண்டாமை ஒழிப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கும் விதமாக நடித்துள்ளார். நாடு விடுதலை பெற்ற பின்னர் காங்கிரஸில் தீவிரமாக இயங்கிய அவருக்கு காமராஜர் ஆட்சியில் 1958 ஆம் ஆண்டு சட்ட மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதன் மூலம் சட்டமன்றத்தில் நுழைந்த முதல் தென்னிந்திய திரைக்கலைஞர் என்ற பெருமையை கே பி சுந்தராம்பாள் பெற்றார். அவருக்கு பின்னரே திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக எஸ் எஸ் ராஜேந்திரன், கலைஞர் கருணாநிதி மற்றும் எம் ஜி ஆர் ஆகியோர் சட்டமன்றத்துக்குள் நுழைந்தனர். இதன் மூலம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு முன்பே நடிகர் ஒருவரை சட்டமன்றத்துக்கு அனுப்பிய கட்சி காங்கிரஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

vinoth

Recent Posts

“அய்யோ காப்பாத்துங்க..!” அதிவேகத்தில் வந்த கார்… நடுரோட்டில் அலறல் சத்தம்… கல்லூரி மாணவிகளுக்கு நேர்ந்த கொடூரம்…!!

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு கல்லூரி மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பொத்தேரியில் உள்ள தனியார்…

16 minutes ago

“அம்மா எங்கே?”… தவிக்கும் 3 பச்சிளங் குழந்தைகள்… தாயின் உயிரைக் குடித்த குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை… கதறும் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டம் கருமந்துறை அடுத்த மோதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுமதி. இவருக்கும் மாதேஸ்வரன் என்பவருக்கும் திருமணமாகி ஏற்கனவே இரண்டு குழந்தைகள்…

26 minutes ago

ஒற்றைக் காலில் 400 மீட்டர்…! ஊன்றுகோல் கூட இல்லாத ஏழ்மை… ஒரு வீடியோவால் மாறிய விதி… அரசு செய்த நெகிழ்ச்சி உதவி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பலியா மாவட்டத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ராகினி, கல்வி மீதான தனது அளப்பரிய ஆர்வத்தால்…

33 minutes ago

மாவட்ட அரசியலில் இருந்து விலகல்…. மகனுக்காக KN நேரு எடுத்த அந்த ஒரு முடிவு…. அலறும் அறிவாலயம்….!

திருச்சி திமுகவில் முதன்மைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என். நேருவின் மகனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு வழங்கப்படவில்லை…

51 minutes ago

கரூர் இடைத்தேர்தலில் திடீர் திருப்பம்…. தவெகவுக்கு செக் வைக்க செந்தில் பாலாஜி போட்ட “சீக்ரெட்” பிளான்… காலையிலேயே பரபரப்பு..!

கரூர் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தை வீழ்த்துவதற்காக திமுக மூத்த தலைவருமான செந்தில்பாலாஜி தீவிர தேர்தல் உத்திகளை வகுத்து…

54 minutes ago

ஐயோ… என் குழந்தையை காப்பாத்துங்க… பெண்ணின் அலறல் சத்தம்… நடுரோட்டில் நடந்த மிரள வைக்கும் அதிர்ச்சி சம்பவம்… பதறும் CCTV வீடியோ…!

தெருவில் தன் குழந்தையுடன் நடந்து சென்ற பெண்ணை ஒருவன் திடீரென வழிமறித்துத் துன்புறுத்தியபோது, அந்த வழியாகச் சென்றவர்கள் அதைப் பொருட்படுத்தாமல்…

1 மணத்தியாலம் ago