திருவனந்தபுரம், இளம் பெண் ஒருவர் விவாகரத்து விசாரணைக்காக வந்துள்ளார். அவரிடம் பாலியல் அத்துமீறையில் ஈடுபட்ட கொல்லம் மாவட்ட நீதிபதி சஸ்பெண்ட் . கேரளாவில் குடும்ப நல நீதிபதியாக இருந்தவர்தான் உதயகுமார். சில நாட்களுக்கு முன்பு விவாகரத்து கோரி வந்த இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தகவல்வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் கொல்லம் மாவட்ட நீதிபதி இடம் புகார் அளித்துள்ளார். விசாரணைக்காக கேரளா ஐகோர்ட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
தலைமை நீதிபதி மற்றும் மூத்த நீதிபதிகள் சேர்ந்து குழு விசாரணை நடத்தி அறுக்கை சமர்ப்பிக்குமாறு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நீதிபதி உதயகுமார் கொள்ளம் மாவட்ட வாகன விபத்து தீர்ப்பாயத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தீர்ப்பு வரும் வரை எந்த ஒரு நீதித்துறை பணியிலும் ஈடுபடக் கூடாது என்றும் கூறியிருந்தது. தற்போது தீர்ப்பு வந்த நிலையில் நீதிபதி உதயகுமாரை கேரளா ஐகோர்ட் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டுள்ளது.
