தேசிய ஜனநாயகக் கூட்டணியி இருந்து ஜான் பாண்டியன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் இக்கூட்டணியின் சார்பில் ராஜபாளையம் தனித் தொகுதியில் ஜான் பாண்டியனின் மனைவி பிரிசில்லா பாண்டியன் போட்டியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத சூழலில், தற்போது இந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அக்கட்சியின் நிறுவனர் ஜான் பாண்டியன் அதிரடியாக அறிவித்துள்ளார்.
அதிமுக தலைமையிலான கூட்டணி அமைப்பில் நீடித்து வந்த தமமுக, தேர்தல் தோல்விக்குப் பிந்தைய அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. கூட்டணியை விட்டு விலகியதைத் தொடர்ந்து, கட்சியின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் மற்றும் புதிய கூட்டணிகள் குறித்து தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து ஜான் பாண்டியன் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
