10TH முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் மீண்டும் வேலைவாய்ப்பு.. மொத்தம் 28,740 பணியிடங்கள் அறிவிப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க..!!

By Soundarya on மாசி 12, 2026

Spread the love

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 28,740 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பின் சிறப்பம்சம் என்னவென்றால், இதற்கு எந்தவிதமான போட்டித் தேர்வுகளும் (No Exams) கிடையாது. விண்ணப்பதாரர்கள் தங்களது 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தகுதியுள்ள நபர்களுக்கு அதிகபட்சமாக ரூ.29,380 வரை மாத ஊதியம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் பிப்ரவரி 14-ம் தேதிக்குள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். கிராமப்புற அஞ்சல் சேவை (GDS) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்த இடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் மேலும் விரிவான தகவல்களைப் பெறவும், விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யவும் இந்திய அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை (indiapost.gov.in) அணுகலாம். 10-ம் வகுப்பு முடித்துவிட்டு அரசு வேலை தேடுபவர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும்.