பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான காக்னிசன்ட், பட்டதாரி இளைஞர்களுக்காக மூன்று வெவ்வேறு பிரிவுகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அனலிஸ்ட் டிரெய்னி பணிக்காகத் தேடப்படும் இந்த இடங்களுக்கு 2024 அல்லது 2025-ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்ற பி.சி.ஏ, பி.எஸ்.சி, பி.காம் மற்றும் பி.பி.ஏ படித்தவர்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் தங்களது படிப்பில் குறைந்தது 50 முதல் 60 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். இதற்கு முன்பனுபவம் எதுவும் தேவையில்லை என்பதால், புதிதாக வேலை தேடும் இளைஞர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும் எழுதவும் தெரிந்திருப்பதுடன், குழுவாக இணைந்து பணியாற்றும் திறன் கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அனைத்து பணி நேரங்களிலும் (Shifts) வேலை செய்யத் தயாராக இருக்க வேண்டும். தகுதியுள்ள நபர்கள் வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாகத் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
நேர்காணலுக்குச் செல்லும்போது கல்விச் சான்றிதழ்கள், அடையாள அட்டைகள் மற்றும் புகைப்படங்களை உடன் கொண்டு செல்வது அவசியமாகும். கடந்த ஆறு மாதங்களுக்குள் இந்நிறுவனத்தின் நேர்காணலில் பங்கேற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது. சம்பளம் குறித்த விவரங்கள் விண்ணப்பதாரரின் திறமைக்கு ஏற்ப நேர்காணலின் போது முடிவு செய்யப்படும்.
