மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள 731 சுருக்கெழுத்தாளர் (Stenographer Grade ‘C’ & ‘D’) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) வெளியிட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கிரேடு ‘சி’ பதவிக்கு 18 முதல் 30 வயது வரையிலும், கிரேடு ‘டி’ பதவிக்கு 18 முதல் 27 வயது வரையிலும் உள்ளவர்கள் தகுதியுடையவர்கள். ஆர்வமுள்ளவர்கள் மே 15, 2026-க்குள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இதற்கான போட்டித் தேர்வு கணினி அடிப்படையில் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை உட்பட 9 மையங்களில் இந்தத் தேர்வு நடத்தப்பட உள்ளது. விண்ணப்பக் கட்டணமாக 100 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது; தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ssc.gov.in என்ற இணையதளம் அல்லது ‘MySSC’ மொபைல் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம். 12-ஆம் வகுப்பு முடித்துவிட்டு மத்திய அரசு வேலைக்காகக் காத்திருப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
