![je - Tamizhanmedia.net](https://tamizhanmedia.net/wp-content/uploads/2024/06/je.jpg)
CINEMA
என்னப்பா சொல்றீங்க..? ஜி.வி பிரகாஷை தொடர்ந்து காதல் மனைவியை பிரிகிறாரா ஜெயம் ரவி..?
கோலிவுட்டில் விவாகரத்து தொடர்பான செய்திகள் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரபல இசை அமைப்பாளரான இமான் தனது காதல் மனைவியை பிரிந்து விட்டு இரண்டாவது திருமணம் செய்தார். இவர் தனது முதல் மனைவியை பிரிந்ததற்கு நடிகர் சிவகார்த்திகேயன் தான் காரணம் என கூறப்பட்டது. சிவகார்த்திகேயன் தனக்கு செய்த துரோகத்தை வெளியே கூறக்கூடாது எனவும் இமான் கூறியிருந்தார். இந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டது.
அடுத்ததாக சூப்பர் ஸ்டார் மகளான ஐஸ்வர்யாவும் நடிகர் தனுஷும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். சுமார் 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையை இருவரும் முறித்து கொள்ள முடிவு செய்தனர். இருவரையும் சேர்த்து வைக்க குடும்பத்தினர் முயற்சி செய்தும் அது முடியவில்லை.
தனுஷும் ஐஸ்வர்யாவும் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல இசையமைப்பாளரான ஜி.வி பிரகாஷ் தனது காதல் மனைவி சைந்தவியை விவாகரத்து பெற்று பிரிந்தார். இருவருக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது. ஜிவி பிரகாஷும், சைந்தவியும் பள்ளிக்கூடத்தில் இருந்த காதலித்து வந்தனர்.
ஆனால் இத்தனை ஆண்டு கால திருமணம் வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்த நிலையில் பிரபல நடிகரான ஜெயம் ரவி தனது காதல் மனைவி ஆர்த்தியை விவாகரத்து பெற்று பிரியப்போவதாக இணையத்தில் செய்திகள் உலா வருகிறது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகி உள்ளதாகவும் செய்திகள் வருகிறது.
இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. இது குறித்து ஜெயம் ரவி தரப்பிலிருந்து எந்த பதிலும் அளிக்கவில்லை. ஆனால் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தனது கணவர் நடித்த ஜெயம் படம் ரிலீஸ் ஆகி 21 ஆண்டுகள் நிறைவு பெற்றதை குறிக்கும் வகையில் உருவான ஒரு போஸ்டரை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த போஸ்டரில் காதல் என்னும் வார்த்தை அது வார்த்தை அல்ல வாழ்க்கை என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இதன் மூலமாக ஆர்த்தி விவாகரத்து செய்திகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.