மீண்டும் செங்கோட்டையன் செய்த சம்பவம்… நொடிக்கு நொடி பரபரப்பில் தமிழக அரசியல் களம்…!

By Nanthini on மார்கழி 5, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் ஒவ்வொரு நொடியும் பரபரப்பாகவே செயல்படுகிறது. அதிலும் குறிப்பாக அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையன் சமீபத்தில் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. கட்சியில் இணைந்த கையோடு அதிமுக மற்றும் திமுகவின் முக்கிய நிர்வாகிகளை விஜயின் கட்சியில் இணைக்கும் பணியில் செங்கோட்டையன் தீவிரம் காட்டி வருகின்றார். இதனால் செங்கோட்டையனின் ஒவ்வொரு நகர்வும் அரசியலில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.

   

இந்நிலையில் ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு செங்கோட்டையன் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். தமிழக வெற்றி கழகம் கட்சிகள் இணைந்த பிறகும் அவர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் போட்டோவை பயன்படுத்துவது அரசியல் களத்தில் விவாதத்தை எழுப்பியுள்ளது. ஆனாலும் மீண்டும் மீண்டும் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா விவகாரத்தில் அவர் விடாபடியாக உள்ளார்.