பரபரப்பு.! “எனது உயிருக்கு ஆபத்து” அதிமுக சொத்துக்கள் என் பெயரில் உள்ளது… ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் பகீர் குற்றச்சாட்டு…!!

By Soundarya on வைகாசி 3, 2026

Spread the love

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன், அதிமுக சொத்துக்கள் தன் பெயரில் இருப்பதால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகத் தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மாற்றுக்கட்சிகளில் இருந்து அழைப்பு வந்த போதிலும், தான் தடம் மாறாமல் உறுதியாக இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், இதையும் மீறி தன்னை விசுவாசம் அற்றவன் என்று யாராவது கூறினால் அதற்கு காலம்தான் பதில் சொல்லும் என்றும் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

அரசியல் என்பது பலருக்கு அதிகாரத்தைக் கொடுக்கும் ஒரு களமாக இருக்கலாம், ஆனால் தனக்கு அது ஒரு ஆன்மிகப் பயணம் என்று பூங்குன்றன் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். தற்போதைய அரசியல் சூழலில் விசுவாசத்தைக் கேள்விக்குறியாக்குபவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலும், தனது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயத்திலும் அவர் இந்த அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாகத் தெரிகிறது.