சமீபகாலமாகவே உலக நாடுகளை உலுக்கிய அழிவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் மண் சரிவு, புயல், வெள்ளம் ஆகிய பல பாதிப்புகள் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் அறிவுபூர்வமான மக்கள் அதிகம் வாழும் ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தற்போது ஜப்பானிய ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை பாபா வங்கா அவருடைய கணிப்பில் தெளிவாகவே கூறியுள்ளார். பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்கா உலகில் அடுத்தடுத்து நடக்க போகும் பேரழிவுகள் தொடர்பாக அவருடைய கணிப்பில் கூறியுள்ளார். அவர் கூறியது போலவே ஏராளமான துயர சம்பவங்கள் நடந்துள்ளது.
தற்போது அவருடைய கணிப்பின்படி மிகப் பெரிய சுனாமி அலை ஒன்று மக்களை தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அடுத்து சுனாமி வரும் என மக்கள் நம்புகின்றனர். இதன் பாதிப்பு எந்தெந்த நாடுகளுக்கு இருக்கும் எனவும் மக்கள் இதனால் எவ்வளவு துன்பங்களை சந்திக்க போகிறார்கள் என்பது குறித்த செய்தி வெளியாகிய அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜப்பானில் பாபா வங்கா கூறியது போல சுனாமி தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகின்றது. கடந்த இரண்டு நாட்களாக அழிவைப் பார்த்து பயந்து போன மக்களுக்கு தற்போது இந்த செய்தி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 1999 ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்த நூலில் ஏகப்பட்ட அழிவுகள் குறித்து கூறப்பட்டுள்ளது.
இந்த அழிவுகளுக்கு பின்னர் ஒரு கொடிய நோய் மக்களை தாக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 2020 ஆம் ஆண்டில் கொரோனா என்ற மாஸ் 1 மில்லியன் கணக்கான மக்களின் உயிரை பறித்தது. இதனைத் தொடர்ந்து 2025 ஆம் ஆண்டு இறுதியில் பெரிய சுனாமி தாக்கம் இருக்கும் என கூறப்பட்டது. பாபா வங்காவின் கணிப்பில் கூறப்பட்டது போல இதுவரையில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. அடுத்த மூன்று நாட்களுக்கு பூகம்பம் வர வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இதனால் சுனாமி வந்து விடுமோ என்ற பயம் கிளம்பியுள்ளது.
