Categories: CINEMA

பாசமிகுந்த தாயை தேடி அலையும் மகன்கள்.. தாய்மார்களின் ஆதரவை பெற்றாரா ஊர்வசி.. “J பேபி” படத்தின் விமர்சனம்..

நீளம் ப்ரொடக்ஷன் பா ரஞ்சித் கம்பெனி தயாரிப்பில் சுரேஷ் மாரி இயக்கத்தில் வெளிவந்த படம் தான் “ஜே பேபி”. இப்படத்தின் விமர்சனத்தை தான் சற்று பார்க்க உள்ளோம்; இப்படத்தில் வரும் முக்கியமான கதாபாத்திரத்தில் ஊர்வசி, தினேஷ், மாறன் நடித்துள்ளார்கள். தாய் பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் திரையில் ஓரளவு விமர்சனங்களை பெற்றுள்ளது.


இக்கதையின் சுருக்கம்; தினேஷ் மற்றும் மாறன் இருவரும் குடித்துவிட்டு அடிக்கடி சண்டை இட்டுக் கொள்வதால், இந்த குடும்ப பிரச்சனையில் மன உளைச்சலுக்கு ஆளாகி ஊர்வசி அவர்கள் சொந்த ஊரை விட்டு தொலைந்து, வட மாநிலமான மேற்கு வங்கத்திற்கு சென்று விடுகிறார். தினேஷும் மாறனும் இணைந்து காவல்துறையிடம் புகார் அளித்து, காவல் துறையினர் ஊர்வசி இருக்கும் இடத்தை கண்டறிந்து, இவர் இருவரும் சென்று ஊர்வசியை பார்த்தார்களா? அம்மாவை மீட்டு வீட்டுக்கு கொண்டு வந்தார்களா? என்று தான் கதைகளம் அமைந்துள்ளது.

தினேஷ் வீட்டில் அம்மாவை மதிக்காமல் சகோதரனுடன் சண்டை இட்டுக் கொண்டே இருக்கிறார், மாறன் அவர்களும் தினேஷுக்கு சரி சமமாக தன் சகோதரன் என்று மறந்து சண்டைக்கு முன் வந்து கொண்டிருக்கிறார். இதற்கு இடைப்பட்டு ஊர்வசி மாட்டிக்கொண்டு மிக மன உளைச்சலுக்கு ஆளாகிறார். ஊர்வசி மனநலக் காப்பகத்திற்கு சென்றும் இவர்கள் பிரச்சனையும், மனநிலையும் மாறாமல் தவிக்கும் அவர் நடிப்பு மிக அற்புதமாக இருக்கிறது. மாறன் போதைக்கு அடிமையாகி குடும்பத்தை துன்புறுத்தி வந்தாலும், அதற்கான காரணமாக அவருக்கு கல்யாணம் நடக்காமல் இருப்பதின் காரணத்தை வெளிப்படுத்தி நடிப்பில் மிகச் சிறப்பாக காட்டியிருப்பார்.

பொதுவாக தினேஷ் அவர்கள் பிரபல நடிகராக இல்லாவிட்டாலும் அவர் தேர்ந்தெடுக்கும் கதை ஒன்றும் மிகச் சிறப்பாக இருக்கும். அட்டகத்தி, விசாரணை போன்ற படங்களில் நடித்து தன் முழு திறமையும் வெளிக்கொண்டு வந்திருப்பார். அதே போல தான் இப்படத்திற்கும் தன் எதார்த்தமான நடிப்பை காண்பித்து அண்ணனுக்கும் தம்பிக்கும் ஏற்படும் சண்டையில் அம்மா மன உளைச்சல் ஆளாகி காணாமல் போனதை தெரிந்து மனம் உருகி இருவரும் சேர்ந்து தேடித் அலையும் பொழுது தனது தத்ரூபமான நடிப்பை வெளிக்கொண்டு வந்திருப்பார். இப்படத்தின் கதை உண்மை சம்பவம் என்பதால் இதில் நடக்கும் அனைத்தும் மக்களுக்கு மிக எதார்த்தமாக ஒத்துப் போகின்றது.

இப்படத்தில் சறுக்கல் என்னவென்றால் தொகுப்பாளர் கொண்டு போகும் விதம்தான், சில இடங்களில் சீரியல் போல் படங்களை ஜவ்வாக இழுத்துக் சென்றிருக்கிறார். அதுமட்டுமின்றி படத்தின் பின்னணி இசை கதைகேற்றவாறு நன்றாக அமர்த்து இருந்தால் இன்னும் சிறப்பூட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் மிகச் சிறப்பான விஷயம் என்னவென்றால், உண்மை சம்பவத்தில், உபியில் காணாமல் போன அம்மாவிற்கு உதவிய நபரையே இப்படத்தில் அந்த கதாபாத்திரத்தில் வைத்திருப்பார்கள். இது படத்திற்கு மேலும் ஒரு உந்துகோலாக அமைந்துள்ளது. படத்தின் கதையும், திரைக்கதையும் இயக்குனர் மிகச் சிறப்பாக அமைத்து திரையில் மக்களுக்கு எளிமையாக காட்டி உள்ளார். இதுவே படத்தின் நல்ல வரவேற்புக்கு காரணம் ஆகும்.

Ranjith Kumar
Ranjith Kumar

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

6 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

6 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

6 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

7 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

7 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

8 மணி நேரங்கள் ago