நடிகராக இருந்து தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் அவர்களை, திரைத்துறையைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சந்திப்புகளின் புகைப்படங்கள் தினந்தோறும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், இன்று முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.
இந்த நெகிழ்ச்சியான சந்திப்பு குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உணர்வுபூர்வமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நடிகராக இருந்து நாட்டை ஆள்பவராக… சில பயணங்கள் உண்மையிலேயே அசாதாரணமானவை. முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் சாரை நேரில் சந்தித்தது எனக்கு கிடைத்த பெரும் கௌரவம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தங்களின் பழைய நினைவுகளைப் பகிர்ந்த சிவகார்த்திகேயன், “ரசிகன் எக்ஸ்பிரஸ் முதல், விஜய் விருதுகள் மேடை, ‘கோட்’ திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடித்தது வரை கடந்து வந்த பாதையைத் தொடர்ந்து, இப்போது முதலமைச்சராக அவரைச் சந்திக்கும் இந்தத் தருணம் எப்போதும் எனக்கு மிகவும் ஸ்பெஷலானது. இந்த சகோதரத்துவமும் பிணைப்பும் என்றும் தொடரும்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இவர்களது சந்திப்பின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களால் வெகுவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…
கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…
ஆந்திர மாநிலம் கோட்டபல்லியைச் சேர்ந்தவர் மமதா. இவருக்கும் மல்லம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மணி சந்தர் என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு…
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரச்சேரி அருகே உள்ள கோரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் எம். கே. அப்துல் காதர் (59).…
ஈரோடு மாவட்டம் புதிய அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவனுக்கு, அவனது சொந்தத் தாய் வழி பாட்டியே…