Connect with us

கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படியா..? நடிகை ஐஸ்வர்யாவுக்கு மாமனார் தம்பி ராமையா போட்ட கண்டிஷன்..

CINEMA

கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படியா..? நடிகை ஐஸ்வர்யாவுக்கு மாமனார் தம்பி ராமையா போட்ட கண்டிஷன்..

 

நடிகர்களான அர்ஜுன் மற்றும் தம்பி ராமையா இருவரும் சம்பந்திகள் ஆனது தான் தற்போது சமூக வலைதளத்தில் அதிகமாக பேசப்படுகிறது. நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா தம்பி ராமையாவின் மகன் உமாபதியை காதலிப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்யப் போவதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியானது.

   

இந்நிலையில் இருவீட்டார் சம்மதத்துடன் அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிச்சயதார்த்த விழா அர்ஜுன் விருகம்பாக்கத்தில் கட்டியிருக்கும் ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து நடைபெற்றது. சினிமா பிரபலங்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் தம்பி ராமையா ஒரு கண்டிஷன் போட்டுள்ளார். ஐஸ்வர்யா அர்ஜுன் நடிகர் விஷாலுடன் பட்டத்து யானை படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்க கூடாது என தம்பி ராமையா சொல்லிவிட்டாராம்.

சினிமாவில் இருக்கும் தம்பி ராமையா தனது வீட்டிற்கு வரும் மருமகளுக்கு இப்படி ஒரு கண்டிஷன் போட்டிருப்பது தான் அதிர்ச்சியாக உள்ளது. பல நடிகைகள் இப்படி ஒரு கண்டிஷன் உடன் தான் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் கல்யாணத்திற்கு பிறகு ஐஸ்வர்யா அர்ஜுன் தனது மாமனார் போட்ட கண்டிஷன் படி நடந்து கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

author avatar
Priya Ram
Continue Reading
To Top