லெபனான் தலைநகர் பெய்ரூட் மற்றும் அதன் தெற்குப் பகுதிகளில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கியத் தளங்களைக் குறிவைத்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) மிகக் கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. ஹிஸ்புல்லாவின் கட்டளை மையங்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகள் அமைந்துள்ள இடங்களை இந்தத் தாக்குதல் துல்லியமாகத் தகர்த்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த அதிரடித் தாக்குதலின் வீடியோ காட்சிகளை இஸ்ரேலிய ராணுவம் வெளியிட்டுள்ளது, அதில் ஹிஸ்புல்லா தொடர்புடைய கட்டிடங்கள் வெடித்துச் சிதறுவதும், கரும்புகை சூழ்ந்திருப்பதும் பதிவாகியுள்ளது.
⭕️ IDF troops continue to maintain a forward defensive posture to protect the residents of northern Israel.
Over the past week, our troops conducted targeted night operations in southern Lebanon, dismantling Hezbollah terrorist infrastructure. pic.twitter.com/ShZahxrjKV
— Israel Defense Forces (@IDF) March 12, 2026
குறிப்பாக, பெய்ரூட்டின் தெற்குப் புறநகர்ப் பகுதியான தஹியே (Dahiyeh) பகுதியில் உள்ள ஹிஸ்புல்லாவின் உள்கட்டமைப்புகளை இஸ்ரேல் குறிவைத்துள்ளது. தாக்குதலுக்கு முன்னதாக அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரித்திருந்தது. ஹிஸ்புல்லா அமைப்பினர் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் தங்களது ஆயுதங்களை மறைத்து வைத்துப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ள இஸ்ரேல், பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்தத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளது.
இந்தத் தாக்குதல்கள் காரணமாக லெபனானில் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதோடு, ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். தெற்கு லெபனானில் உள்ள மஜடெல் (Majadel) போன்ற கிராமங்களிலும் ஹிஸ்புல்லாவின் ஏவுகணைத் தளங்களை இஸ்ரேல் அழித்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது மீண்டும் ராக்கெட் தாக்குதல்களைத் தொடங்கியதைத் தொடர்ந்தே, இஸ்ரேல் தனது வான்வழித் தாக்குதல்களை இந்த அளவுக்குத் தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
