“இனி கொலைகள் கிடையாது.. ஆனா”… ட்ரம்ப் வெளியிட்ட அந்த ஒரு பதிவு.. அதிர்ச்சியில் உலக நாடுகள்…. ஏப்ரல் 22-க்கு பிறகு என்ன நடக்கும்..?

Spread the love

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிக்க, இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே 10 நாட்கள் இடைக்கால போர் நிறுத்தம் ஒப்பந்தம் செய்யப்பட்டு தற்போது அமலுக்கு வந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை ஏவினர். இதற்குப் பதிலடியாக லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தீவிரத் தாக்குதலில் 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தற்போது எட்டப்பட்டுள்ள இந்த போர் நிறுத்தம் பொதுமக்களிடையே சிறு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இக்கட்டான சூழலில், ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா அமைப்பினர் கண்ணியத்துடனும் பொறுப்புடனும் நடந்து கொள்வார்கள் என்று தான் நம்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். “இனி கொலைகள் இருக்கக்கூடாது; இறுதியில் அமைதி நிலைபெற வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ள அவர், இந்த வாய்ப்பை ஹிஸ்புல்லா சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் அது அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய நல்வாய்ப்பாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.

மறுபுறம், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்க ஈரான் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இதன் மூலம் எண்ணெய் விலை மற்றும் ஹார்மஸ் நீரிணை வழி பயணம் போன்ற உலகளாவிய வர்த்தகச் சிக்கல்கள் தீரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இருப்பினும், யுரேனியத்தை ஒப்படைப்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை ஈரான் தரப்பு இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அமலில் உள்ள இந்த போர் நிறுத்தம் ஏப்ரல் 22-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால், போர் மீண்டும் தொடங்கும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ஒருவேளை பேச்சுவார்த்தை வெற்றி பெற்று அமைதி ஒப்பந்தம் உறுதியானால், அதில் கையெழுத்திட அதிபர் ட்ரம்ப் நேரடியாக பாகிஸ்தான் செல்லக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிரந்தர அமைதி திரும்புமா என்பதைத் தீர்மானிக்கும் முக்கியத் தருணமாகப் பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

ச்சீ… பெற்ற தந்தை என்றும் பாராமல்… நிலத்துக்காக நடுரோட்டில் கொடூரமாக இழுத்துச் சென்று தாக்கிய பிஎஸ்எஃப் வீரர்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…

9 minutes ago

மனிதநேயம் எங்கே போனது…? திருமண ஊர்வலத்தில் குதிரை மீது… நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…

16 minutes ago

த்ரிஷாவுக்கு திருமணத்தில் நம்பிக்கையே இல்லையா…? வைரலாகும் ‘தக் லைஃப்’ மேடை ரகசியம்…! த்ரிஷாவின் பழைய வீடியோ இப்போது திடீரென வைரலாவது ஏன்…?

திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…

25 minutes ago

“அடி மாட்டு ரேட்டுக்கு பேரம்..?!” – வைகோ பேட்டியால் ஆடித்தீர்ந்த தமிழக அரசியல்… விஜய்யை வாரிச்சுருட்டிய திமுக எம்.பி…!!

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகியதைத் தொடர்ந்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,…

26 minutes ago

“கண்ணீர் விட்டு கதறிய இளையராஜா..! ஆரம்பகால நினைவுகளைப் பகிர்ந்து… பாக்யராஜுக்கு வெளியிட்ட உருக்கமான வீடியோ…!!”

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத திரைக்கதை மன்னனும், பிரபல இயக்குநருமான கே. பாக்யராஜ் காலமான செய்தி கேட்டு ஒட்டுமொத்தத் திரை…

36 minutes ago

வியூஸுக்காக யூடியூபர் செய்த மோசமான காரியம்… டெல்லி போலீஸ் எடுத்த அதிரடி முடிவு… போக்சோ சட்டத்தில் கைது…!

சமூக ஊடகங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், அதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கவும் எந்த எல்லைக்கும் செல்லும் சில யூடியூபர்களின்…

37 minutes ago