நாடாளுமன்றத்தில் எப்படியாவது தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்றிவிட வேண்டும் என்று பாஜக தீவிரமாக ஆயத்தமாகி வரும் நிலையில், அதனை தடுத்து நிறுத்த காங்கிரஸ் கட்சி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இருப்பினும், தற்போதைய சூழலில் ‘இந்தியா’ கூட்டணியில் ஏற்பட்டுள்ள அடுத்தடுத்த பிளவுகள் மற்றும் உட்கட்சி முரண்பாடுகள் காங்கிரசுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்த பலவீனமான அரசியல் சூழலால், நாடாளுமன்றத்தில் 22 எம்பிக்களைக் கொண்டு பலமான சக்தியாக விளங்கும் திமுகவின் ஆதரவு காங்கிரசுக்கு தற்சமயம் மிக அத்தியாவசியமாக மாறியுள்ளது. இதனால், மசோதாவை முறியடிப்பதற்கான தங்களின் போராட்டத்திற்கு திமுக முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று அக்கட்சியிடம் காங்கிரஸ் கெஞ்சும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் பரவலாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
