#image_title
சினிமாவில் தன்னுடைய 50 ஆவது ஆண்டை விரைவில் தொடப் போகிறார் இசைஞானி இளையராஜா. தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும் தன்னுடைய 82 ஆவது வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1500 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. இளையராஜா 76 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படம் மூலம் அறிமுகமான நிலையில் ஐந்தே ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் நம்பர் 1 இசையமைப்பாளராக ஆனார்.
அதன் பிறகு மிடாஸ் மன்னன் போல அவர் தொட்டதெல்லாம் தங்கமாக மாறின. அந்தளவுக்கு அவர் பாடல்கள் அடுத்த சில தசாப்தங்களுக்கு தமிழர்களை மயக்கியது. கிட்டத்தட்ட 48 ஆண்டுகளாக தமிழர்களின் இசை அன்னையாக இளையராஜா இருந்து வருகிறார்.
இந்நிலையில் அவரின் பயோபிக் திரைப்படம் பற்றிய அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. தனுஷ் இளையராஜாவாக நடிக்க, அருண் மாதேஸ்வரன் இயக்க கனெக்ட் மீடியா என்ற வட இந்திய நிறுவனம் ஒன்று தயாரிக்கும் என அறிவிப்புகள் வெளியாகி, திரைக்கதை அமைக்கும் பணிகள் நடந்து வந்தன.
#image_title
இந்நிலையில் இப்போது அந்த படம் கைவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி ரசிகர்களை சோகத்தில் மூழ்கச் செய்துள்ளது. அதற்கான காரணமாக படத்தைத் தயாரிக்க இருந்த கனெக்ட் மீடியா நிறுவனம் இப்போது பின்வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் ஒரு காரணமாக திரைக்கதையில் தனுஷுக்கும் இளையராஜாவுக்கும் இடையில் கூட கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
ஆனாலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் படம் சம்மந்தப்பட்டவர்களிடம் இருந்து வராததால் இந்த தகவல்களின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகியுள்ளது. விரைவில் இது குறித்த தெளிவான அறிவிப்பு படக்குழுவிடம் இருந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…