விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியானது 6 சீசன்களை கடந்து ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் 7 வது சீசன் தொடங்கியது. இதில் விசித்ரா, விஷ்ணு, வினுஷா தேவி, சரவணன், பாவா செல்லதுரை, கூல் சுரேஷ், ஆயிஷா உதயகுமார், ஜோவிகா, ஐஷு, பிரதீப் ஆண்டனி, மாயா கிருஷ்ணன், ரவீனா, யுகேந்திரன், மணி சந்திரா, விஜய் வர்மா, அனன்யா, பூர்ணிமா ரவி, நிக்சன் என 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதில் விஜய் வர்மா இந்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தடவை பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது ஆரம்பமாகி ஒரு சில நாட்களிலேயே சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. இந்நிலையில் நேற்று விசித்ரா அடிப்படை கல்வி எல்லோருக்கும் அவசியம் என கூற, அதற்கு ஜோவிகா ‘எல்லாருமே படிச்சிட்டு பெரிய ஆள் ஆகணும்றது இல்லை. நான் பேசிட்டு இருக்கேன் நீங்க நிறுத்துங்க’ என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் ‘படிப்பு என்கிற விஷயத்தால எல்லா பிள்ளைகளும் தப்பான வழியில் போறாங்க. அதை பற்றி பேச தான் நான் வந்தேன். நான் பேசிட்டு இருக்கேன் நீங்க நிப்பாட்டுங்க’ என விசித்ராவை ஆப் செய்தார். இப்படி நேற்று பிக் பாஸ் வீடு கலவரமாய் காணப்பட்டது.
இந்த சூழலில் இந்த வார நாமினேஷனில் பவா செல்லதுரை, அனன்யா, பிரதீப் ஆண்டனி, யுகேந்திரன் உள்ளிட்ட ஏழு பேர் இருக்கின்றனர். இதில் யார் வெளியே போகப்போகிறார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது. அதன்படி பவா செல்லதுரை, விசித்திரா, யுகேந்திரன் ஆகிய மூன்று பேரில் யாராவது ஒரு ஆள் முதலில் வெளியே செல்லலாம் என முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போது முதலில் வீட்டை விட்டு வெளியேறுபவர் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அனன்யா ராவ்தான் இந்த வாரத்தில் வீட்டை விட்டு வெளியேறப்போகிறார் என்று கூறப்படுகிறது. அவர் இதுவரை குறைந்த வாக்குகளே பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. பொறுத்திருந்து பாப்போம் யார் வெளியேற்றப்படுவார் என்பதை.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…