சாதிவெறிதான் தவெகவின் சமத்துவ முழக்கமா?.. விஜய் அரசுக்கு அடுத்த சிக்கல்…!!!

By Muthu Mani on வைகாசி 27, 2026

Spread the love

தமிழகத்தில் புதியதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சியில், குடிசை மாற்று வாரிய வீடுகள் ஒதுக்கீட்டில் கூட மக்கள் சாதி ரீதியாகத் தனிமைப்படுத்தப்பட்டு, பிரிக்கப்பட்டுள்ளதாக திமுக மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது. தேர்தல் களத்தில் நாங்கள் சாதி பார்த்து வேட்பாளர்களை நிறுத்தவில்லை என்று தவெகவின் முக்கியப் புள்ளியான ‘நிழல் முதல்வர்’ ஆதவ் அர்ஜுனா கூசாமல் பொய் சொன்னார் என்று திமுக குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், அதற்கு முற்றிலும் மாறாக தற்போது தவெகவின் செயல்பாடுகள் அமைந்துள்ளன என்று திமுக சாடியுள்ளது.

குறிப்பாக, சென்னை சைதாப்பேட்டை தொகுதியின் தவெக சட்டமன்ற உறுப்பினர் (MLA) அருள் பிரகாசம், மோசடி செய்து மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபடுவதாக திமுக சுட்டிக்காட்டியுள்ளது. குடிசை மாற்று வாரிய வீடுகள் ஒதுக்கீட்டில் சாதிவெறிச் செயலை அரங்கேற்றி வரும் அருள் பிரகாசத்தின் இந்த அநாகரிகமான நடவடிக்கைதான் நீங்கள் மேடைகளில் முழங்கிய சமத்துவமா? என்று திமுக மிக ஆக்ரோஷமாகக் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த விவகாரம் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.