இனி எந்த தப்பும் நடக்காது..! ரேஷன் அட்டைதாரர்களுக்கு வந்த மகிழ்ச்சி செய்தி.. அரசின் அதிரடி உத்தரவு…!!

By Soundarya on வைகாசி 20, 2026

Spread the love

தமிழ்நாடு ரேஷன் கடைகளில் முறைகேடுகளைத் தடுக்க அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதல்வர் விஜய் அவர்களின் உத்தரவின் பேரில், மாநிலம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளில் அதிகாரிகள் தீவிர ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ரேஷன் கடைகளில் ஏதேனும் முறைகேடுகள் அல்லது முறையற்ற செயல்பாடுகள் நடந்தால், பொதுமக்கள் உடனடியாகப் புகார் அளிக்கலாம் என உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் தங்களின் புகார்களைத் தெரிவிக்க 1967 என்ற பிரத்யேக உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடை ஊழியர்கள் அனைவரும் பொதுமக்களுக்குச் சரியான எடையில் தரமான பொருட்களை வழங்குவதோடு, மிகவும் கவனமாகப் பணியாற்ற வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். தவறு செய்யும் ஊழியர்கள் மீது உடனடி மற்றும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.