ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரான் கடற்படை வெளியிட்டுள்ள எச்சரிக்கை வீடியோ சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 60 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில், ஈரானின் செபா கடற்படைத் தளபதி ஒருவர் அமெரிக்காவின் 121-ம் எண் போர்க்கப்பலை உடனடியாக இந்தியப் பெருங்கடலுக்குத் திரும்புமாறு எச்சரிப்பதும், மீறினால் தாக்குதலுக்கு உள்ளாவீர்கள் என்று மிரட்டுவதும் பதிவாகியுள்ளது.
இந்த வழித்தடத்தில் செல்லும் மற்ற கப்பல்கள் 10 கிலோமீட்டர் தூர இடைவெளியைப் பராமரிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் முன்னறிவிப்பின்றி தாக்குதல் நடத்தப்படும் என்றும் ஈரான் கடும் தொனியில் தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், இந்த மோதல் சூழல் மேலும் தீவிரமடைந்துள்ளது. ஈரான் தனது எல்லையைப் பாதுகாப்பதாகக் கூறினாலும், அமெரிக்கா இந்த வீடியோவை இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
இதனால் மாறாக, ஹார்முஸ் ஜலசந்தியில் தனது போர்க்கப்பல்கள் கண்ணிவெடி அகற்றும் பணிகளையே மேற்கொண்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஹார்முஸ் வழித்தடத்தில் ஈரானின் கட்டுப்பாடுகளை ஏற்க முடியாது என்றும், சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்தால் ஈரான் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
